Skip to main content

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளதா?... ஆய்வுக்குப் பின் மத்தியக்குழு பதில்...!

Published on 29/01/2020 | Edited on 29/01/2020

முல்லைப் பெரியாறு அணையில் மத்திய மூவர் கண்காணிப்பு குழுவின் குழுத்தலைவர் குல்ஷன் ராஜ் தலைமையில் நேற்று ஆய்வு செய்தனர். முல்லை பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க உச்சநீதிமன்றம் பரிந்துரையின்படி மூவர் குழு அமைக்கப்பட்டது. இக்குழு ஆண்டுதோறும் அணைப் பகுதியில் ஆய்வு செய்து பராமரிப்பு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கும்.அதன்படி பணிகள் செய்யப்படும்.

 

MULLAI PERIYAR DAM REVIEW

 



இதன் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமை பொறியாளர் குல்ஷன் ராஜ்சும்  உறுப்பினர்களாக தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறை செயலர் மணிவாசன் கேரள அரசு சார்பில் நீர்வள ஆதார அமைப்பின் செயலர் அசோக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இக்குழு கடந்த ஜூன் 4ம்தேதி அணையில் ஆய்வு நடத்தியது. அதன்பின் நேற்று ஆய்வு செய்தது. அப்பொழுது மெயின் அணை பேபி அணை பகுதிகளை பார்வையிட்டனர்.

நீர்க்கசிவு காலரியில் தற்போது அணையின் நீர் மட்டத்திற்கு ஏற்ப நீர்க்கசிவு உள்ளதா என ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு சரியான அளவிலேயே இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து முல்லைப் பெரியாறு அணையில் உள்ள 13 ஷட்டர்களின் இரண்டாவது மற்றும் நான்காவது ஷட்டர்களை இயக்கி பார்த்தனர். இயக்கமும் சரியாக இருந்தது. இந்த ஆய்வில் மத்திய நீர்வள ஆணையம் இயக்குனர் ராஜிவ் சிங்கால், இணை இயக்குனர் நிதின் குமார், காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணி பெரியாறு அணை செயற்பொறியாளர் சாமியின் உதவி பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

 



அதன்பின்  மாலையில் குமுளியில்  உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் மூவர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதன்பின்மத்திய மூவர் குழு தலைவர் குல்ஷன் ராஜ் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, " முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. பேபி அணை பலப்படுத்திய பின் முல்லைப்  பெரியாறு அணையில் 152 அடி நீர் தேக்கலாம். பெரியாறு அணைக்கு பேபி அணைக்கும் இடையில் பல ஆண்டுகளாக  நிலுவையிலுள்ள மண்அணை மீது பாதை பராமரிப்பு பணியை தமிழக அரசு செய்யலாம். 

பேபி அணையை பலப்படுத்துவதற்காக அப்பகுதியில் உள்ள சில மரங்களை வெட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அணைக்கு மின்இணைப்பு வழங்கு வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என்று கூறினார். இந்த பேட்டியின்போது தமிழக கேரள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். 

சார்ந்த செய்திகள்

Next Story

மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Police register cheating case against producers of Manjummel Boys

இயக்குநர் சிதம்பரம் இயக்கத்தில் சௌபின் ஷாஹிர், ஸ்ரீநாத் பாசி, பாலு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த பிப்ரவரி 22 ஆம் தேதி வெளியான மலையாளப் படம் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’. பரவா பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்திருந்தார். இப்படம் கொடைக்கானலில் நடந்த உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. 2006 ஆம் ஆண்டு கொடைக்கானலுக்கு சுற்றுலா வரும் கேரள இளைஞர்கள், ஒரு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கி அதிலிருந்து எப்படி மீள்கின்றனர் என்ற சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

ad

சர்வைவல் த்ரில்லர் ஜானரில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் பாராட்டி வந்தனர். இப்படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடி வசூலித்து மலையாள திரையுலகில் ரூ.200 கோடி கிளப்பில் இணைந்த முதல் படம் என்ற சாதனையை படைத்தது. இந்த நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான பரவா பிலிம்ஸ் பங்குதாரர் ஷான் ஆண்டனி, லாபத்தில் பங்கு தருவதாக கூறி ஏமாற்றி விட்டதாக கேரளா அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் எர்ணாகுளம் கீழமை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்காக ரூ.7 கோடியை முதலீடு செய்தேன். பட தயாரிப்பு நிறுவனத்தின் பங்குதாரர் ஷான் ஆண்டனி லாபத்தில் 40 சதவீதம் பங்கு தருவதாக கூறியிருந்தார். ஆனால் இதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. லாபம் மட்டும் இல்லாமல் முதலீடு செய்த பணத்தை கூட திருப்பி தரவில்லை” என குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்தின் தயாரிப்பாளர்களான சவுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகியோரின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவிட்டிருந்தார். இது தொடர்பாக விளக்கம் கேட்டு தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர்கள் வுபின் ஷாஹிர், ஷான் ஆண்டனி, பாபு ஷாஹிர் ஆகிய மூன்று பேர் மீதும் மரடு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். எர்ணாகுளம் நீதிமன்ற உத்தரவின்படி வழக்கானது பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.