Skip to main content

முகிலன் மீட்பு... களமிறங்கியது சிபிசிஐடி...

Published on 03/03/2019 | Edited on 03/03/2019

சுற்றுசூழல் ஆர்வலரும், கூடங்குளம் மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளியுமான முகிலன் கடந்த 15 ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இரவு 10 மணிக்கு வந்தவர் அதன்பிறகு காணாமல் போயுள்ளார். பல்வேறு போராட்டங்களில் முன்னணியில் நின்று நடத்தியவர் முகிலன். அரசுக்கு எதிராகவும், காவல் துறைக்கு எதிர்ப்பாகவும் கூடங்குளம் நியூட்ரினோ ஸ்டெர்லைட்ஆலைகளுக்கு  எதிராகவும் காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடத்தும் மணல் மாபியாக்களுக்கு எதிராகவும் போராட்ட களத்தில் இருந்தவர் முகிலன். அந்த முகிலன் நிச்சயமாக கடத்தப்பட்டிருக்கிறார் என்று அவரது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் இறங்கின. இந்த நிலையில் முகிலன் காணாமல் போன வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு.

 

mukilan Rescue..?

 

இதன் தொடர்ச்சியாக சென்ற 2 ஆம் தேதி தனது முதல்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளார்கள் சிபிசிஐடி போலீசார். சென்னையில் நேற்று போலீசார் நடத்திய விசாரணையில் முகிலன் காணாமல் போனது பற்றி புகார் கொடுத்த லயோலா மணி மற்றும் எழும்பூர் ரயில் நிலைத்தில் அன்று இரவு முகிலனோடு வந்திருந்து கரூர் புறப்பட்டு சென்ற காவிரி ஆறு பாதுகாப்பு குழுவை சேர்ந்த பொன்னரசு என்பவர் மற்றும் ராஜேஷ் மேலும்முகிலனின் மனைவி பூங்கொடி ஆகியோரிடம் நேற்று ஒருநாள் முழுக்க சென்னையில் விசாரணை செய்துள்ளார்கள். 

 

 

அதேபோல் கரூரில் முகாமிட்டுள்ள சிபிசிஐடி போலீசார் காவிரி ஆறு பாதுகாப்பு அமைப்பை சேர்ந்த கேஆர்எஸ்மணி மற்றும் மே பதினேழு இயக்க திலீபன்,முகிலனுடன் போராட்டக்களத்தில் தொடர்ந்து பயணப்பட்டு வந்த சமூக ஆர்வலர் இசை என்கிற ராஜேஸ்வரி ஆகியோரிடம் விசாரணை செய்துள்ளார்கள் சிபிசிஐடி போலீசார். தொடர்ந்து முகிலன் தொடர்பில் இருந்த இயக்க தோழர்கள்,அரசியல் கட்சியினர், சுற்றுசூழல் அமைப்பை சேர்ந்தவர்கள் என பலரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளது சிபிசிஐடி. மேலும் முகிலன் பயன்படுத்திய செல்போன் உரையாடல்கள் வாட்ஸப் மற்றும் முகநூல் என பல்வேறு ஆதாரங்களை திரட்டி வைத்துள்ளார்கள் சிபிசிஐடி போலீசார். 

 

இறுதியாக அவரது செல்போனில் தொடர்புகொண்ட தோழர்களையும் அவர் விவரங்களையும் ஆதாரங்களாக திரட்டியுள்ளதாகவும், முகிலன் ரயில் மூலம் வெளியூர் செல்லவே இல்லை என்பதையும் போலீசார் உறுதிப்படுத்துகிறார்கள். சிபிசிஐடி விசாரணை வேகம் பெற வேகம் பெற முகிலன் விவகாரம் கடத்தப்பட்டாரா? அப்படி என்றால் யாரால் கடத்தப்பட்டார், எங்கு உள்ளார். என்கிற பல்வேறு மர்மங்கள் வெளிவர தொடங்கும். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கடத்தி செல்லப்பட்ட அரசுப் பேருந்து விபத்து

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
Hijacked government bus accident

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசுப் பேருந்து பணிமனையில் உள்ள அரசுப் பேருந்துகள் அனைத்தும் இரவு நேரங்களில் பணிமனைக்குள் நிறுத்த முடியாததால் அருகே உள்ள பட்டுக்கோட்டை சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருக்கும். அதிகாலை முதல் ஒவ்வொரு பேருந்தும் அந்தந்த பயண நேரத்திற்கு ஓட்டுநர்கள் ஓட்டிச் செல்வார்கள்.

வழக்கம்போல் நேற்று இரவு பேருந்துகள் சாலை ஓரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு ஓட்டுநர், நடத்துநர்கள் பணிமனையில் ஓய்வெடுக்கச் சென்று விட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை திருவாடானை செல்லும் வழியில் ஓரியூர் அருகே வண்டாத்தூர் கிராமத்தில் பிரதானச் சாலையில் ஒரு அரசுப் பேருந்து ஒரு லாரியில் மோதி விபத்துக்குள்ளாகி நின்றது. சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடி வந்து பார்த்தபோது லாரி ஓட்டுநர் காலில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்தார். அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிக்கியிருந்த அந்த பேருந்து அறந்தாங்கி பணிமனையைச் சேர்ந்த அறந்தாங்கியில் இருந்து திருவாடானை செல்லும் TN 55 N 0690 என்பது தெரிய வந்தது. ஆனால் யார் இந்த பேருந்தை ஓட்டி வந்தது என்பது தெரியவில்லை. உடனே அறந்தாங்கி டெப்போவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பிறகே சாலை ஓரம் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகளில் திருவாடானை செல்லும் பேருந்து காணாமல் போனது தெரிய வந்தது.

பணிமனையில் நிறுத்தி இருந்த பேருந்தை யார் கடத்திச் சென்றது என்று போக்குவரத்து கழக அதிகாரிகளும் ஊழியர்களும் விசாரணையில் உள்ளனர். பாதுகாப்பு மற்றும் கவனக்குறைவால் ஒரு பேருந்து கடத்தப்பட்டு விபத்து ஏற்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Next Story

குடும்பத்துடன் காரில் வந்து ஆடுகள் கடத்தல்; போலீசார் விசாரணை

Published on 10/09/2023 | Edited on 10/09/2023

 

Arriving in a car with family and smuggling goats; Police investigation

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு, ஆசிரியர் நகர் ஆகிய பகுதிகளில் வசித்து வருபவர்கள் சிலர் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்த ஆடுகள் காலை நேரத்தில் அவிழ்த்து விட்டால் சாலைகளில் உணவு தேடி அலைவதும், மாலை வீடுகளுக்கு செல்வது வழக்கம்.

 

இந்நிலையில் இன்று காலை ஆசிரியர் நகர், முதல் குறுக்கு தெருவில் ஆடுகள் சுற்றித் திறந்து கொண்டிருப்பதை பார்த்த காரில் குடும்பத்துடன் வந்த மர்ம நபர்கள் காரை நிறுத்தி குழந்தைக்கு ஆடுகளை காண்பிப்பது போல், ஆட்டுக்கு பிஸ்கட் கொடுத்து காரில் தூக்கி போட்டுள்ளார். இதேபோல் ஒன்றன்பின் ஒன்று என 4 ஆடுகளை திருடி காருக்குள் போட்டுக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.

 

இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு எதிரில் வெகு நேரமாக காரில் சிலர் ஆடுகளை திருடுவதைக் கண்டு தன்னுடைய செல்போனில் பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ வைரலானதால் நகர போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.