Skip to main content

’இருட்டு அறையில் வைத்து சித்திரவதை செய்கிறார்கள்’ - முகிலன் மனைவி பூங்கொடி கண்ணீர் 

Published on 10/07/2019 | Edited on 10/07/2019

 

கரூர் நீதிமன்றத்தில் நள்ளிரவில் ஆஜர்படுத்தி திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார் முகிலன்.  இந்த நிலையில் நீதிபதி வீட்டில் ஆஜராக வந்த முகிலனை வீடியோ, போட்டோ எடுக்க வந்த பத்திரிக்கையாளர்களை 100 மீட்டர் முன்னதாக பேரிகேட் கொண்டு தடுத்து நிறுத்தியதால் காவல்துறைக்கும் பத்திரிக்கையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

p

அப்போது பத்திரிகையாளர்களிடம் பேசிய முகிலன் மனைவி பூங்கொடி,   ‘’யாராவது தூண்டி விட்டுத் தான் இந்த சம்பவம் நடக்கிறது.   யார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. அவரை இருட்டு அறையில் அடைத்து வைத்திருந்தார்கள். முதலுதவி சிகிச்சை கூட செய்யாமல் வைத்திருக்கிறார்கள். 

 

என்ன நடக்கிறது?  நாம் எந்த நாட்டில் இருக்கிறோம். மக்களுக்காக போராடியது பெரிய குற்றமா? கொலை செய்து கொள்ளையடித்தவர்ளை எல்லாம் விட்டு விடுகிறார்கள். 

 

சென்னையில் நீதிபதி காலை 10 மணிக்கு கரூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவிட்டார். எங்களிடம் போலீசார், அப்படித்தான் அழைத்து செல்வோம் என்றார்கள். ஆனால் இரவோடு இரவாக அழைத்து வந்திருக்கிறார்கள். உங்களுக்காக போராடுவது தவறா என்று கண்ணீர்விட்டு அழுதார். 

 

அவர் போல் இனிமேல் யாரும் போராட்டத்திற்கு வரக்கூடாது என்று அவர் மீது வீண் பழி சுமத்துகிறார்கள். நான் கூட அவரை சந்தித்துப் பேச  அனுமதிக்கவில்லை. முப்பது நாற்பது போலீசார் சுற்றி நின்று கொண்டு எங்களை பேச அனுமதிக்காமல் இருக்கிறார்கள் என்று கதறினார். 

சார்ந்த செய்திகள்

Next Story

கரூர் நீதிமன்றத்தில் முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார்!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019

காணாமல் போன சமூக செயற்பாட்டாளர் முகிலன் 141 நாட்களுக்கு பிறகு திருப்பதி ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேச காவல்துறை, தமிழக சிபிசிஐடி- யிடம் முகிலனை ஒப்படைத்தது. இந்நிலையில் குளித்தலை சேர்ந்த பெண் ஒருவர் முகிலன் மீது கொடுத்த பாலியல் புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் முகிலனை கைது செய்தனர். அதன் பிறகு 10 ஆம் தேதி காலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முகிலன் பிறகு 15 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Mukhilan appeared in Karur court

 

 

இதன் பிறகு இன்று மதியம் திருச்சி மத்திய சிறைக்கு சென்ற போலீசார் முகிலனை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக அழைத்தனர் அப்போது முகிலன் என் மீது என்ன வழக்கு வாரண்ட் இருக்கிறதா என்றெல்லாம் போலீசை பார்த்து கேள்வி எழுப்ப போலீசார் கஸ்டடி எடுப்பதற்காக நீதிமன்றம் கொண்டு செல்கிறோம் என கூறியிருக்கிறார்கள். ஆனாலும் முகிலன் முரண்டு பிடிக்க பல வந்தமாக முகிலனை கரூர் நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். வழக்கம் போல் முகிலன் நீதிமன்றத்திற்கு முன்பு பல்வேறு கோஷங்களை முழங்கியவாறு நீதிமன்றத்தில் ஆஜரானார். போலீசார் நீதிமன்றத்தில் முகிலன் மீது பாலியல் வழக்கு உள்ளது. இது சம்மந்தமாக முகிலனை விசாரிக்க வேண்டி இருப்பதால் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து  விசாரிக்க அனுமதி தர வேண்டும் என நீதிபதியிடம் கூறினார்கள்.

 

 

Mukhilan appeared in Karur court

 

 

அப்போது முகிலன் என்னை போலீசார் சிறைக்குள்ளேயே அடிக்கிறார்கள். போலீஸ் கஸ்டடி கொடுத்தால் என்னை மேலும் அடிப்பார்கள் என கஸ்டடிக்கு செல்ல மறுத்தார். இந்த நிலையில் நீதிபதி எழுத்துப்பூர்வமாக உங்கள் பதிலை கூறுங்கள் என முகிலனிடம் கூறியதோடு, மீண்டும் நாளை காலை முகிலனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துங்கள் என காவல்துறைக்கு உத்தரவிட்டார். மீண்டும் நாளை 23- ஆம் தேதி நீதிமன்றத்தில் முகிலனை ஆஜர்படுத்தி, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறையினர் எடுக்க முடிவு செய்துள்ளனர். முகிலன் மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கு சம்பந்தமாகத் தான், இந்த கஸ்டடி என்றாலும் முகிலன் 141 நாள் எங்கே இருந்தார் யார் மூலமாக இருந்தார் என்று பல்வேறு விவரங்களை போலீசார் விசாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

Next Story

என் உயிருக்கு ஆபத்து உள்ளது...எங்கே போனீர்கள்...முகிலனின் 140 நாட்கள் அதிர்ச்சி சம்பவம்!

Published on 11/07/2019 | Edited on 11/07/2019

140 நாட்கள் எந்த விவரமும் தெரியாமல் இருந்த சமூக போராளி முகிலன் காணாமல் போன விவகாரம் கடந்த 6-ம் தேதி காலை பத்தரை மணிக்கு முடிவுக்கு வந்துள்ளது. ஆனால் அதில் வெளிவராத பல மர்மங்கள் புதைந்திருப்பதாகவும் அவை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் சமூக ஆர்வலர்களும் காவல்துறை அதிகாரிகளும் தெரிவிக்கிறார்கள்.

திருப்பதியில் ஜூலை 6-ம் தேதி காலை மன்னார்குடியிலிருந்து வந்த ரயில் எஞ்சின் முன்பு, "அமைக்காதே அணுக்கழிவு மையத்தை கூடன்குளத்தில் அமைக்காதே', "கர்நாடகத்திற்கு ஒரு நீதி, தமிழகத்துக்கு ஒரு நீதி', "கைது செய் ஸ்டெர்லைட் ஆலை அதிபரை கைது செய்' என பலநாள் மழிக்கப்படாத தாடியுடன் ஒருவர் தமிழில் கோஷம் போட்டுக் கொண்டிருந்தார். அவர்தான் காணாமல் போன -கடத்தப்பட்ட முகிலன் என்பதை அவரது பள்ளிகால நண்பர் சண்முகம் என்பவர் பார்த்துவிட்டு அதை வீடியோ வில் பதிவு செய்து முகிலனின் மனைவிக்கும் நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளார். ரயில் முன்பு கோஷம் போட்டுக் கொண்டிருந்த முகிலனை திருப்பதி ரயில்வே போலீசார் கைது செய்தனர். முகிலன் திருப்பதியில் ரயில்வே போலீசாரிடம் சிக்கிக் கொண்ட வீடியோ வெளியானதும், "அவரை தேடிக் கண்டுபிடித்து விட்டோம்' என ஏற்கனவே இரண்டுமுறை சென்னை உயர்நீதி மன்றத்தில் ரகசிய வாக்குமூலம் கொடுத்திருந்த தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவரை சென்னைக்கு கொண்டு வந்தனர்.

 

mikilan



தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு என்பது போலீஸ் அதிகாரி களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை'' என கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் ஆதாரத்துடன் வீடியோ ஒன்றை முகிலன் வெளியிட்டுவிட்டு, "என் உயிருக்கு ஆபத்து உள்ளது'' என்றார். அன்றிரவு ரயில் பயணத்தின் போது காணாமல் போனார். "எங்கே போனீர்கள்' என திரும்பி வந்திருந்த முகிலனிடம் கேட்டோம். ""நான் கடத்தப்பட்டேன். என்னை நான்கு அடையாளம் தெரியாத நபர்கள் கடத்திக் கொண்டு போய் சித்ரவதை செய்தார்கள். ஒரு இடத்தில் என்னை அடைத்து வைத்தார்கள். நான்கு பேரில் ஒருவர் மட்டுமே என்னிடம் வந்து பேசுவார். அவர் தவறான விபரங்களைத்தான் என்னிடம் கூறுவார். தமிழில் வெளியாகும் செய்தித்தாள் ஒன்றை என்னிடம் காட்டினார். அதில் நான் காணாமல் போன துயரத்தினால் எனது மனைவியும் மகனும் இறந்து விட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.

 

mukilan



திருப்பதியில் ரயில்வே போலீசார்தான் என் மனைவியும் மகனும் நலமுடன் இருக்கிறார்கள் என்கிற உண்மையை கூறினார்கள். அவர்களது கஸ்டடியில் என்னை வைத்து ஏகப்பட்ட ஊசிகளை உடலில் செலுத்தினார்கள். பனிரெண்டு நாட் களுக்கு முன்பு என்னை நாய் கடித்தது. எனக்கு நெஞ்சுவலி வந்தது. எதற்கும் நான் சிகிச்சை பெறவில்லை. கோவையில் சுற்றுச்சூழல் போராளி ரமேஷின் மனைவியை கொன்றார்கள். குஜராத்தில் நரேந்திரமோடி ஆட்சியில் 2000 பேர் கொல்லப் பட்டதை வெளிப்படுத்திய ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பழைய வழக்கில் ஆயுள் தண்டனை கொடுத்து சிறைக்கு அனுப்பினார்கள். இதுதான் போலீஸ். இப்பொழுது என் மீது ஒரு பாலியல் வழக்கை புனைந்துள்ளனர். இதையெல்லாம் சட்டரீதியாக சந்திப்பேன்'' என வேகம் குறையாமல் பேசினார். சென்னைக்கு அழைத்து வரப்பட்ட முகிலனை அவரது நீண்ட கால நண்பரும் நெடுவாசல் போராட்ட தளபதியுமான குணசீலன் என்பவர் சந்தித்துப் பேசினார். குணசீலனைத் தொடர்ந்து முகிலனின் மனைவி பூங்கொடி சந்தித்து பேசினார். அவர்கள் முகிலன் பற்றி நண்பர்களிடம் விளக்கினார்கள்.

 

mukilan



முகிலனை அடையாளம் தெரியாத இடத்தில் வைத்து கடுமையாக சித்ரவதை செய்துள்ளார்கள். அதனால் முகிலனின் மனநிலை சிறிதளவு பாதிப்பு அடைந்துள்ளது. ஈஞதடஞதஆக பஞதபமதஊ எனப்படும் இந்த சித்ரவதை மிகக் கொடுமை யானது. தனிமையான அறையில் அடைக்கப்படும் நபர்கள் எந்தவிதத்திலும் வெளியுலக தொடர்பு கொள்ள முடியாது. யாருடனும் பேச முடியாது. சில நேரங்களில் சூரிய வெளிச்சத்தைக் கூட பார்க்க முடியாது. அடி, உதை, சுகாதாரமற்ற, கொசுக்கள் மொய்க்கும் கழிவுகள் ஆகியவற்றுக்கிடையே வாழ வைப்பார்கள். இந்த விதமான கொடுமையை முகிலன் ஏற்கனவே அனுபவித்துள்ளார். ஒருமுறை சிறையில் இதுபோன்ற சித்ரவதையை முகிலனுக்குக் கொடுத்தார்கள். (அதை நக்கீரனிலும் சிறைப் பேட்டியாக தெரிவித்திருந்தார்). கூடங்குளம் ஆற்றுமணல் கொள்ளை, மணல் கொள்ளை இவற்றுக்கெதிராக முகிலன் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. அந்த வழக்குகளை தனித்தனியாக சந்திக்க முடியாது. அல்லது "நான் கைதாகிறேன்', "என்னை சிறையில் வைத்து வழக்குகளை முடியுங்கள்' என முகிலன் கைதானார். அவரை தனிமைச் சிறையில் சூரிய வெளிச்சம் புகாத அறையில் மலநாற்றத்தையும் கொசுக்கடியையும் அனுபவிக்க வைத்தார்கள். அதை நீதிமன்றத்தில் புகாராக தெரிவித்தார் முகிலன். அதைத் தொடர்ந்து அவர் விடுதலை ஆனார்.


அவரை மறுபடியும் சிறையிலடைத்தால் அரசுக்கு கெட்ட பெயர் வரும் என்பதால் அவரை, ஸ்டெர்லைட் "மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற வீடியோவை வெளியிட்டதும் கடத்தி சென்றார் கள். அந்த வீடியோவில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டை திட்டமிட்டு நடத்தியது. சைலேஷ்குமார் யாதவ் என்கிற ஐ.ஜி.யும் கபில் சிரோத்கர் என்கிற டி.ஐ.ஜி.யும்தான் அதற்கு ஒட்டுமொத்த பொறுப்பு என கூறியிருந்தார். (இதை துப்பாக்கிச் சூட்டின் போதே ஆதாரங்களுடன் நக்கீரன் செய்தி வெளியிட்டிருந்தது). காவல்துறை அதிகாரிகளின் செயல்கள் தொடர் பான ஆதாரங்கள் முகிலனுக்கு எப்படி கிடைத்தது என்பதை தெரிந்து கொள்ளவே முகிலனை கடத்தினார்கள். அவர் கடத்தப்பட்ட செய்தி ஊடகங்களில் பெரிதாக வெளிவரவே அவரை கொன்றால் ஆபத்து என முடிவு செய்த போலீசார் முகிலனுடன் நெருக்கமாக போராட்டங்களில் செயல்பட்ட பெண்ணைத் தொடர்பு கொண்டனர். அவர், "நெடுவாசல் போராட்டத்தின் போது என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி நெடுவாசலில் உள்ள ஒரு தங்குமிடத்தில் என்னிடம் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்டார்' என முகிலன் மீது புகாரை தெரிவித்தார். இது முகிலனின் பொதுவாழ்விலும் தனி வாழ்விலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தப் பெண்மணி தன் புகாரில் உறுதியாக இருந்தார். ஆனால், "நெடுவாசலில் தங்கும் விடுதிகளே இல்லை. எனது வீட்டில்தான் முகிலன் தங்கினார். வீட்டு வராண்டாவில் படுத்து கிடந்த முகிலன் எப்படி பாலியல் ரீதியாக தவறாக நடந்திருக்க முடியும்' என நெல்சன் லெனின் என்பவர் முகநூலில் பதிவிட்டார். உடனே முகிலன் வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. திலகம் "அந்தப் பதிவு சட்டவிரோதம்' என நீக்க வைத்தார்.


செந்தமிழன் என்கிற நக்சல் தோழரை சிறையிலேயே சித்ரவதை செய்து, மனநிலை பிறழச் செய்து வெளியே மனநோயாளியாக்கி அனுப்பி யிருக்கிறார்கள். அதே போல் முகிலனை ஸ்டெர்லைட், வி.வி.மினரல் நிறுவனத்தார் மற்றும் தமிழ்நாடெங்கும் மணல் திருடும் வி.ஐ.பி.க்கள் என அனைவரும் சேர்ந்து சித்ரவதை செய்து மன நோயாளியாக்க முயற்சி செய்துள்ளனர். இரண்டு முறை கோர்ட்டில் "முகிலன் இருக்குமிடத்தை கண்டு பிடித்து விட்டோம்' என சொன்ன சி.பி.சி.ஐ.டி. போலீ சார் அந்த வழக்கு விசா ரணைக்கு வரும் நிலையில் தான், கடந்த 6-ம் தேதி முகிலனை கைது செய்து கோர்ட் கண்டனத்தில் இருந்து தப்பியிருக்கிறார்கள்'' என்கிறார்கள்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, "அதெல்லாம் இல்லை. முகிலனை வெளியே வரவைத்தது அவரது குருவான கோவை சுற்றுச்சூழல் ஆர்வலர் ரமேஷின் மனைவியின் மரணம்தான். உளவியல் தாக்குதலால் முகிலன் அவராகத்தான் தலைமறைவாக இருந்தார். அவர் தலைமறைவாக இருக்கும் இடம் கோவை ரமேஷுக்கு நெருக்கமானவரும் கம்ப்யூட்டர் வல்லுநருமான இன்னொரு ரமேஷ், டாக்டர் புகழேந்தி ஆகியோருக்கு நன்றாக தெரியும். முகிலன் தலைமறைவாக இருந்த காலகட்டத்திலோ அவர் மீண்டும் வெளிப்பட்ட 6-ம் தேதி வரை இவர்கள் எதையும் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவில்லை. போராட்ட களங்களில் நெருக்க மாக பழகிய பெண், முகிலன் மீது பாலியல் புகார் சொல்லப் போவதாக தெரிவித்து வந்தார். இது முகிலனை பாதித்தது. தனது பொதுவாழ்க்கைப் போராட்டங்கள் கேள்விக்குள்ளாகும் என்ற பயத்தில் முகிலன் தலைமறைவானார். அவருக்கு அவரது தோழர்கள் உதவி செய்தனர்.

கோவை ரமேஷின் மனைவி இறந்தபிறகு அந்த உதவிகள் நின்று போயின. அதனால் முகிலன் வெளியே வர வேண்டியதாயிற்று. வெளியே வந்தவுடன் தன்னை கடத்தினார்கள் எனச் சொல்கிறார். முகிலன் மீது புகார் சொல்லியுள்ள பெண்மணியின் பெற்றோர் "என் பெண்ணை போராட்டக்காரர்கள் கடத்தி விட்டனர்' என புகார் சொன்னபோது, "அப்படி இல்லை' என மறுத்தவர்தான் அந்தப் பெண்மணி. அவரை யாரும் விலைக்கு வாங்க முடியாது. தனது மனைவியும் மகனும் இறந்து போனதாக போலீசார் பொய்த் தகவல் சொன்னார்கள் என சொல்லும் முகிலன், ரமேஷின் மனைவி இறந்ததை பற்றி மிகச் சரியாக பேசுகிறார். மகனும் மனைவியும் உயிரோடிருக்கிறார் கள் என தெரிந்து கொள்ள முடியாத முகிலனுக்கு ரமேஷின் மனைவி இறந்தது மட்டும் எப்படி தெரிந்தது. நாய் கடித்து 12 நாளாகிவிட்டது எனக் கூறும் முகிலன், நாய் கடிக்கும் போது வெளியேதான் சுற்றித் திரிந்திருக்கிறார். இதையெல் லாம்தான் நாங்கள் கோர்ட்டில் தெரிவித்தோம்'' என்கிறார்கள்.

முகிலனின் போராட்ட செயல்பாடுகளும் அவர் மீது பெண்மணி கூறியுள்ள புகாரும் விசாரணையில் உள்ளன. முகிலனின் மனைவி பூங்கொடி தன் கணவன் மீது நம்பிக்கை தெரிவிக்கிறார். பெண்மணி கடுமையாக புகார் கூறுகிறார். நீதியின் தீர்ப்பு விரைவில் தெரியும். போராளிகள் மீது பாலியல் புகார் கூறுவதுடன் அவர்களை சித்ரவதை செய்வதும் வழக்கமான ஒன்றுதான் எனக் கூறும் சமூக ஆர்வலர் பியூஷ் மனூஸ், "மக்களின் அன்பே அவர்களுக்கு பாதுகாப்பு' என்கிறார். அதிகாரத்தின் கரங்களோ, உண்மையான போராளிகளின் தனிப்பட்ட சிக்கல்களை புகாராக்கி, மொத்த போராட்ட உணர்வையும் சிதைக்கும் நாடகத்தை அரங்கேற்றுகிறது.