Skip to main content

முகிலன் மீதான பாலியல் வழக்கில் 2வது குற்றவாளியாக விசுவநாதனை கைது செய்த சிபிசிஐடி ! 

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

 

கரூர் மாவட்டத்தை சேர்ந்த விசுவநாதன் என்பவர் முகிலனுடன் அரசுக்கு எதிராக பல்வேறு கட்ட போராட்டங்களில் இணைந்து செயல்பட்டவர். இவரை சி.பி.சி.ஐ.டி போலிசார் முகிலன் மீதான் பாலியல் வழக்கில் கைது செய்துள்ளனர். 
 

இதுகுறித்து அவருடைய வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரன் கூறும்போது, கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் புகலூரில் வசிப்பவர் விஸ்வநாதன். அண்ணன் தம்பிகள் ஐந்து பேர் கொண்ட பெரிய விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அண்ணன் தம்பிகளுக்கு பாகப்பிரிவினை எழுத்துப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டு முடிவான பிறகு , அமெரிக்கா சென்று சிகாகோ நகரில் வாழ்ந்த விசுவநாதன் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாளராக செயல்பட்டு வந்துள்ளார் . 

 

Viswanathan



அதன் காரணமாக பல்வேறு நெருக்கடிகளை , இழப்புகளை சந்தித்து பின்பு புகழூரியிலேயே வந்து வாழ முடிவு செய்து வந்துள்ளார் . தனக்கு பிரித்துக் கொடுக்கப்பட்ட குடும்ப சொத்துக்களை எல்லாம் ஏற்கனவே விற்று இலங்கை தமிழர்கள் ஆதரவு பணிகளுக்காக செலவு செய்ததால் கையில் ஒரு பைசா கூட இல்லாமல் புகழூருக்குத் திரும்ப வந்துள்ளார். தன்னுடைய அண்ணன் இளங்கோவனிடம் தனக்கு பெரிய மனது பண்ணி தமது மூதாதையர்கள் வாழ்ந்த வீட்டை விலைக்கு கடனாக கொடுத்து உதவுமாறு கேட்டுள்ளார். அதைக்கேட்ட விஸ்வநாதனின் அண்ணன் இளங்கோவன் நாங்கள் எந்த சொத்தையும் விலைக்குக் கொடுக்குற பழக்கம் இல்லை எனவே விலைக்கு கொடுக்க இயலாது.
 

ஆனால் தானமாகப் பெற்றுக் கொள்ள சம்மதித்தால் வீட்டில் மட்டுமல்ல அதோடு ஒட்டியுள்ள தோட்டத்தையும் இலவசமாக எழுதித் தர தயாராக இருக்கிறேன் என்று சொல்லி விஸ்வநாதனை நெகிழ வைத்துள்ளார்.
 

அதனை ஏற்றுக்கொண்ட விசுவநாதன் தனது பூர்வீக வீடு மற்றும் அதை ஒட்டிய தோட்டத்தை தன் அண்ணன் இளங்கோவிடமிருந்து தானமாக பெற்று வாழ்ந்து வருகின்ற போது, காவிரி ஆற்றில் அரசியல்வாதிகளால் ஏராளமான மணல் கொள்ளையடிக்கப்பட்டது கண்டு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் என்ற ஒன்றை தொடங்கினார்.


 

 

அதன் மூலமாக கரூர் மாவட்ட பொதுமக்களை திரட்டி பலகட்ட போராட்டங்களை நடத்தினார். காவிரி ஆற்றுக்குள் இறங்கி நின்று போராடும் போராட்டம், பொதுக்கூட்டங்கள் என்று பலவகையான முறையில் போராட்டங்களை நடத்தினார்.
 

அவர் நடத்திய போராட்டங்களில் வைகோ, நல்லகண்ணு, பழ நெடுமாறன் உட்பட்ட ஏராளமான தலைவர்களை அழைத்து காவிரி பாதுகாப்பு கூட்டங்களை நடத்தினார். பழ நெடுமாறன், நல்லகண்ணுவும் ஆகியோர் காவிரி ஆற்றை பார்வையிட சென்ற பொழுது உடன் சென்ற என்னை மணல் கொள்ளையர்கள் காரை வழிமறித்து எனது இரண்டு கன்னத்திலும் கடுமையாக குத்தினார்கள்.
 

காவிரி ஆறு பாதுகாப்பு கூட்டங்களில் மற்றும் போராட்டங்களில் பங்கேற்ற சமூக செயல்பாட்டாளர் முகிலன் மீது தற்போது பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதியப்பட்டு நடந்து வருகிறது. அந்த வழக்கில் ஒரு ராஜேஸ்வரி என்ற பெண் முகிலன் தன்னை திருமணம் செய்வதாக சொல்லி தன்னுடன் பழகினார் என்று புகார் தெரிவித்துள்ளார் .
 

மேற்படி புகார்தாரர் ஆகிய ராஜேஸ்வரியும் முகிலனும் புகலூர் விசுவநாதன் அவர்கள் நடத்திய காவிரி பாதுகாப்பு போராட்டங்களில் பங்கேற்றவர்கள் .
 

அதன் காரணமாக "உங்கள் போராட்டங்களில் முகிலனும் ராஜேஸ்வரியும் கலந்து கொண்டிருக்கிறார்கள் எனவே முகிலனுக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டும் " என்று சிபிசிஐடி போலீஸார் விசுவநாதனிடம் வலியுறுத்தி இருக்கிறார்கள். அதை விசுவநாதன் மறுத்து எனக்கு தெரிந்ததை தான் சொல்லுவேன் தெரியாததை சொல்ல முடியாது. நீங்கள் சொல்வதற்காக பொய்சாட்சி நான் சொல்ல முடியாது. முகிலனும் ராஜேஸ்வரியும் காவிரி பாதுகாப்பு மணல் கொள்ளை எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டார்கள் என்பதுதான் உண்மை. அதை நான் சொல்ல முடியும் . மற்றபடி அவர்கள் இருவரும் எப்படி பழகினார்கள் என்பதெல்லாம் பற்றி எனக்கு தெரியாது .எனக்கு தெரியாத விபரங்களை நான் எப்படி சொல்ல முடியும் என்று அவர் மறுத்துள்ளார்.


 

 

இவ்வாறு அவர் பொய் சாட்சி சொல்ல மறுத்ததன் காரணமாக முகிலனுக்கும் ராஜேஸ்வரிக்கும் இருந்த முறைகேடான தொடர்புக்கு விசுவநாதன் உதவியாக இருந்தார் என்றும் அது தொடர்பான வழக்கு சாட்சிகளை வழக்கு சாட்சியங்களை மறைத்தார் என்றும் கூட்டாக சதி புரிந்தார் என்றும் சொல்லி நேற்று 7./8/19 இரவு நேற்று நள்ளிரவு விஸ்வநாதன் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று மாலை சுமார் ஐந்து முப்பது மணிக்கு விசுவநாதன் வீட்டுக்குச் சென்ற சிபிசிஐடி போலீசார் அவரை தரதரவென இழுத்து கை கால்களில் காயம் ஏற்படும் அளவுக்கு பலவந்தமாக பலத்தைப் பிரயோகித்து அவர் மூக்கு கண்ணாடி எல்லாம் உடைத்து போட்டுவிட்டு அவரது உறவினர்களுக்கும் வழக்கறிஞருக்கும் முறைப்படி சட்டப்படி உச்சநீதிமன்ற விதிகளின்படி தகவல்களை சொல்லாமல் ஏதோ ஒரு விசாரணைக்கு கூட்டிச் செல்வதாக சொல்லி அதன் பிறகு முகிலன் மீது ராஜேஸ்வரி கொடுத்துள்ள பாலியல் வழக்கில் இரண்டாவது குற்றவாளியாக சேர்த்து நள்ளிரவில் அவரை சிறைக்கு கொண்டு சென்றார்கள் என்றார். 
 

இந்த தகவலை தெரிந்த தமிழ் ஆர்வலர்கள் காவிரி பாதுகாப்பு இயக்க செயல்பாட்டாளர்கள் எல்லாம் ஒன்று திரண்டனர். அது தொடர்பாக செய்தியாளர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டு செய்தி சேகரிக்கப்பட்டது. பின்பு அவரை திருச்சி சிறையில் அடைக்க சிபிசிஐடி போலீசார் முயற்சித்தபோது ,மேற்படி விஸ்வநாதனின் வயதையும் அவருடைய உடல் நிலையையும் கருத்தில் கொண்டு கரூர் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் எண் 1 நீதிபதி விஜய்கார்த்திக் அவர்கள் விஸ்வநாதனை கரூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார் .

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி; காவலை நீட்டித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Senthilbalaji who appeared in person; The court extended the custody

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையொட்டி செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி கடந்த முறை காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 33ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுகொள்ள சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (22.04.2024) செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 34 ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.