Skip to main content

மனைவி மீதான சந்தேகம்... பட்டப்பகலில் கத்தியால் குத்தி கொலை!!-கணவன் கைது!!

Published on 12/12/2018 | Edited on 12/12/2018

சென்னை சேத்துப்பட்டில் மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர். 

 

murder

 

அமைந்தகரை சேர்ந்த டேவிட் என்பவருக்கும் சேத்துப்பட்டுவைச் சேர்ந்த ரேகா என்ற பெண்ணுக்கும் கடந்த 2004 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் உள்ள நிலையில் மனைவியின் நடத்தையில்  டேவிட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டு  அடிக்கடி இருவருக்கும் வாய் தகராறு நடந்து வந்தது.

 

murder

 

இந்நிலையில் பிரச்சனை அதிகமானதன் காரணமாக தனது இரு குழந்தைகளுடன்  தனி வீட்டில் லேகா வசித்து வந்தார்.  இந்நிலையில் இன்று பிற்பகலில் சாலையில் சென்று கொண்டிருந்த பொழுது அங்கு வந்த அவரது கணவர் டேவிட் அவரை கத்தியால் குத்தினார். இதனால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் லேகா. 

 

murder

 

டேவிட்டை கைது செய்துள்ள சேத்துப்பட்டு போலிசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் அச்சம் கிளம்பியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்