காட்டுமன்னார்கோவில்எம்.ஆர்.கே.இன்ஸ்டிடியூட்ஆப்டெக்னாலஜிகல்லூரியின்பட்டமளிப்புவிழா, கல்லூரி வளாகத்தில் நேற்று (09.04.2023) நடைபெற்றது. கல்லூரியின்தலைவர்எம்.ஆர்.கே.பி. கதிரவன்வரவேற்று பேசினார்.பட்டமளிப்புவிழாவினை எம்ஆர்கேநினைவுகல்விஅறக்கட்டளை அறங்காவலர் எம்.ஆர். தெய்வசிகாமணிதுவக்கி வைத்தார். எம்.ஆர்.கே கல்லூரியின் நிறுவனரும், தமிழக வேளாண்மற்றும் உழவர் நலத்துறை அமைச்சருமானஎம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் பேசுகையில், "மாணவர்கள்தங்கள்பெற்றோர்களை தெய்வமாகமதித்து அவர்களின்கனவுகளை நிறைவேற்ற வேண்டும். மாணவர்கள்ஆர்வமுடன் இளமையிலேயேகல்வியைகற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்" எனப்பேசினார்.
சிறப்புவிருந்தினராக தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகத்தின்துணைவேந்தர்கீதாலட்சுமி கலந்து கொண்டு பேசுகையில், "இக்கல்லூரியின் தலைவர்,கிராமப்புற மாணவர்கள் படித்துவாழ்க்கையில் முன்னேற வேண்டும் என இந்த கல்லூரியைஇந்தஊரில்அமைத்துள்ளார்.இக்கல்லூரியில் ஆராய்ச்சி பட்டபடிப்பில் மாணவர்கள்பட்டம்பெற்று இந்த கல்லூரிக்கும் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும்" என மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.
இதனைத்தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்து கூறினார். கல்லூரி முதல்வர் ஆனந்தவேலுபட்டம் பெற்றமாணவ,மாணவிகளுக்குஉறுதிமொழியைவாசித்தார். இவ்விழாவில்கல்லூரியின் நிர்வாக அதிகாரி கோகுலகண்ணன், மேலாளர்விஸ்வநாதன் கல்லூரியின் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவ, மாணவிகள், முக்கியபிரமுகர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர். உதவிப்பேராசிரியர் சிவப்பிரியா நன்றி கூறினார்.