/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_879.jpg)
தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு இன்று பிறந்தநாள். இவருக்கு திமுகவினர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், கட்சியினரும் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சகோதரியும், எம்.பி.யுமான தமிழச்சி தங்கப்பாண்டியன் கவிதையாக அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_3074.jpg)
அமைச்சர் தென்னரசுவுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
என் கண்ணீர் காணப் பொறுக்காதவன்
என் சிரிப்பின் விலை உலகென்றாலும் பெற்றுத் தரத் துணிபவன்
என் குறைகளின் கனமுடன் என்னைத் தாங்கிச்
சுமப்பவன்
என் நிறை கண்டால் பூரித்துப் பூப்பவன்
என் அத்தானின் அணுக்கக் கவசம்
என் மகள்களின் யானைபலத் தாய்மாமன்
அன்னையும் அத்தனுமற்ற
என் வாழ்வில் என்றென்றும்
தலைப்படுவேன்
என் தம்பியின் தோளில்
எனும் பெருமையுடன்…
பிறந்தநாள் வாழ்த்துகள் “ கண்ணு”
என்று தெரிவித்துள்ளார்.இந்தப் பதிவு சமூகவலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டுவருகிறது.
என் கண்ணீர் காணப் பொறுக்காதவன்
என் சிரிப்பின் விலை உலகென்றாலும் பெற்றுத் தரத் துணிபவன்
என் குறைகளின் கனமுடன் என்னைத் தாங்கிச்
சுமப்பவன்
என் நிறை கண்டால் பூரித்துப் பூப்பவன்
என் அத்தானின் அணுக்கக் கவசம்
என் மகள்களின் யானைபலத் தாய்மாமன்
1/2 pic.twitter.com/IcjmuhFQve
— தமிழச்சி (@ThamizhachiTh) April 11, 2022
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)