Advertisment

மாநிலங்களவை தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

kl

விரைவில் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார்கள். தமிழ்நாட்டில் வரும் அக்டோபர் 4ஆம் தேதி இரண்டு இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்த இரண்டு இடங்களுக்கான வேட்பாளர் பெயர்களை தற்போது திமுக அறிவித்துள்ளது.

Advertisment

அதன்படி, வேட்பாளர்களாக டாக்டர் கனிமொழி, கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுகவின் கே.பி. முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் தங்களின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அந்த இரண்டு இடங்களுக்குத் தற்போது தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட கனிமொழி, மறைந்த திமுக மூத்த தலைவர் என்.வி.என். சோமு அவர்களின் மகள் ஆவார். மற்றொரு வேட்பாளரான ராஜேஷ்குமார், நாமக்கல் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக இருக்கிறார்.

Advertisment

RAJYA SABHA ELECTION
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe