கரோனா பெருந்தொற்றால் பலதரப்பட்ட மக்களும் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டு அரசியல் தலைவர்களும் தன்னார்வலர்களும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கி உதவி செய்துவருகின்றனர்.
அந்தவகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா. எழிலன் இருவரும் சூளைமேடு, திருவேங்கடபுரம் மேத்தா நகர் சோபன் பாபு சிலை எதிர் தெருவில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.