







Published on 13/05/2021 | Edited on 13/05/2021
தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் பரவல் அதிகமாக இருப்பதால் 10.05.2021 முதல் 24.05.2021 வரை சில கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. கடுமையான நடவடிக்கை இல்லாததால் ஊரடங்கை மதிக்காமல் சாரை சாரையாக வாகனங்களில் மக்கள் வெளியே வந்த வண்ணமே உள்ளனர். பிற்பகல் 12 மணிக்கு மேலும் வாகனங்கள் தொடர்ந்து வந்து வண்ணம் இருந்தன. அதனால், சென்னை பரங்கிமலை பகுதியில் போலீசார் இன்று (13.05.2021) வாகன சோதனை செய்து வழக்குகள் பதிந்தனர்.