Skip to main content

வீடு இடிந்து விழுந்து தாய் கர்ப்பிணி மகள் பரிதாப பலி! நேரில் சென்ற அமைச்சர்! 

Published on 04/05/2022 | Edited on 04/05/2022

 

Mother's pregnant daughter killed in house collapse Minister who went in person!

 

தூத்துக்குடி, அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துராமன். விளிம்புநிலை வாசியான இவர், தூத்துக்குடியின் மாநகராட்சி கழிவறையில் டோக்கன் கொடுக்கிற வேலை செய்து வருகிறார். இவரது மனைவி காளியம்மாள் (45). இவர்களது மகள் கார்த்திகா (21). இவருக்கும் விளாத்திகுளம் அருகிலுள்ள மார்த்தாண்டம் பட்டியைச் நேர்ந்த செல்வகுமார் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. தற்போது கார்த்திகா 8 மாத கர்ப்பிணியாக இருந்தார். அண்மையில் கார்த்திகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்த பின்பு பிரசவத்திற்காக தாய் வீடு அழைத்து கொண்டு வந்திருக்கிறார்கள்.


தூத்துக்குடியில் முத்துராமன் வசித்து வந்த வீடு 50 ஆண்டுகால பழமையானது. பழங்கால முறைப்படி பனங்கட்டைகளில் மேல் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஆண்டு பெய்த தொடர்மழை காரணமாக வீட்டின் மேற் கூரை சேதமடைந்திருக்கிறது. நேற்று முன்தினம் இரவு அந்த அறையில், முத்துராமன் அவரது மனைவி காளியம்மாள் மகள் கார்த்திகா மூவரும் தூங்கியுள்ளனர். முத்துராமனின் தாய் காத்தம்மாள் வீட்டின் வெளிப்பகுதியில் தூங்கியுள்ளார். அதிகாலை 3 மணியளவில் முத்துராமன் வேலைக்குச் செல்வதற்காக ஏழுந்த போது, மேற் கூரையின் மணல் விழுவது போன்ற சத்தம் கேட்டுள்ளது. அடுத்த நொடி வீட்டின் மேற் கூரை மொத்தமாக சரிந்து வீட்டின் உள் பகுதியில் விழுந்திருக்கிறது. இதில் உறங்கிக் கொண்டிருந்த காளியம்மாள் அவர் மகள் நிறை மாத கர்ப்பிணியான கார்த்திகா, முத்துராமன் ஆகியோர் இடிபாடுகளுக்கிடையே சிக்கிக் கொண்டனர்.

 

Mother's pregnant daughter killed in house collapse Minister who went in person!

 

இவர்களின் அலறல் சத்தம் கேட்டு விழித்துக் கொண்டு பதறிய, முத்துராமனின் தாய் காத்தம்மாள் அருகிலுள்ளவர்களிடம் தகவல் தெரிவிக்க, தொடர்ந்து தகவலறிந்த போலீசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து வந்தனர். பொது மக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஆனாலும், இடிபாடுகளில் சிக்கிய காளியம்மாள், அவரது மகள் நிறைமாத கர்ப்பிணியான கார்த்திகா இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள். பீரோவின் அருகில் முத்துராமன் நின்றிருந்ததால் மேற், கூரை விழாமல் பீரோ தடுத்ததால் படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தகவலறிந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் செந்தில் ராஜ், எஸ்.பி.பாலாஜி சரவணன் ஆகியோர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அதன் பின் சிகிச்சையிலிருந்த முத்துராமனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர் கீதாஜீவன் அவரிடம் தி.மு.க.சார்பில் 2 லட்சம் நிதி உதவியையும் வழங்கினார். வீடு இடிந்து விழுந்து தாய் நிறைமாத கர்ப்பிணி மகள் இருவரும் இறந்த சம்பவம் அண்ணா நகர் பகுதியை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.