Skip to main content

உயிர் பலி கொடுத்த மகள் பாசம்...! - நெஞ்சம் பதறும் உறவின் உயிர் வலி!

Published on 07/07/2019 | Edited on 07/07/2019

கருவில் சுமந்து பெற்றெடுத்து தாலாட்டி, பாலூட்டி, சீராட்டி, பாசத்தையும், நேசத்தையும் உணவாய் ஊட்டி தன் குழந்தையை வளர்க்கும் அந்த தாய் மடி எந்த அளவுக்கு பாசத்தால் பிணைந்துள்ளது என்பது வீரம்மாள் என்ற தாய் தன்னையே கொடுத்து உணர்த்தியுள்ள சம்பவம் உள்ளத்தை நெகிழ வைக்கிறது. 

Sacred Motherhood on Daughter


ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் மூங்கில் பாளையத்தில் நாடார் காலனி பகுதியை சேர்ந்தவர் சென்னியப்பன்.  இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு   திலகவதி  என்ற ஒரே மகள். குடும்ப பிரச்சனையால் கடந்த 20 வருடங்களுக்கு முன்பே தனது கணவரை பிரிந்த வீரம்மாள் மகள் திலகவதி ஐந்து வருட குழந்தையாக இருக்கும் போதே தனியாக வந்து இந்த 20 வருடங்களாக தனது தம்பி ஒருவர் வீட்டில் மகளுடன் வசித்து வருகிறார்.  வீரம்மாள் விசைதறிப்பட்டறையில்  வேலை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து மகளுடன் குடும்பம் நடத்தி வந்தார். தனியாக கஷ்டப்பட்டு கூலி வேலை செய்தாலும் தனது மகளை முடிந்த அளவுக்கு படிக்க வைத்தார். 

 

Sacred Motherhood on Daughter


கணவரை பிரிந்த நிலையிலும் தனது எதிர்காலமே மகளோடுதான் என மகள் மீது தீராத பாசத்தால் இருந்துள்ளார். மகள் திலகவதிக்கு திருமண வயது வந்தது. திருமணம் செய்து பார்க்க ஆசைப்பட்டார். மகளுக்கு ஏற்ற பொருத்தமான மாப்பிள்ளை பார்த்து  கடந்த சில நாட்களுக்கு முன்பு   மகள் திலகவதிக்கு திருமணம் செய்து வைத்தார். திருமணமான மகள் தனது கணவருடன் அவர்கள் வீட்டுக்கு  சென்றுவிட்டார்.

ஒரு நாளும் மகளை பிரிந்து வாழ்ந்திராத தாய் வீரம்மாள் தனியாக தனது வீட்டில் மகள் நினைவுகளுடன் கண்ணீரில் தத்தளித்தார். பெத்த மனம் பித்து என்பதை போல ஒவ்வொரு நாளும் மகளின் மீதான பாச வேதனை வீரம்மாளை வாட்டியது. அதிலிருந்து வீரம்மாளால் விடுபடவே முடியவில்லை. திருமணமான மகள் இனி அவன் கணவனோடு இருப்பது தானே நியாயம் அப்படியென்றால் நான் தனியாக எப்படி வாழ முடியும் மகள் இல்லாத நிமிடங்களை கடக்கவே முடியவில்லையே என்று வாடிய வீரம்மாளின் பாசப் பைத்தியம் ஒரு முடிவை எடுத்தது. நேற்று திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

Sacred Motherhood on Daughter


அந்த பகுதி மக்களே கண்ணீரும், கதறுலுமாக மகள்மீது பாசம் யாருக்கு தான் இல்லை. ஆனால் வீரம்மாள் உயிரை கொடுத்தது கொஞ்சமும் நியாயமில்லை. அந்த அப்பாவி தாய் மகளே உலகம் என்று வாழ்ந்து விட்டாள் யாரிட்டும் மனம் விட்டு பேசவில்லையே... எனவேதனையுடன் கூறுகிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.

Next Story

முன்னாள் காதலியைப் பார்க்க 3500 கி.மீ பயணித்த ஜி.எம். குமார்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
actor gm kumar drove 3500 kms to meet his ex

வெயில், குருவி, மாயாண்டி குடும்பத்தார், என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஜி.எம் குமார். பாலாவின் அவன் இவன் படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் ஒருவராக நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர். கடைசியாக கடந்த ஆண்டு கலையரசன் நடிப்பில் வெளியான புர்கா படத்தில் நடித்திருந்தார். இதனிடையே இயக்குநராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.

அவரது எக்ஸ் பக்கத்தில் தொடர்ந்து ஆக்டிவாக இருப்பது அவரது வழக்கம். அதில் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வரும் அவர், தற்போது தனது முன்னாள் காதலியை பார்க்க 3500 கி.மீ பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெட்ராஸிலிருந்து பெங்களூரு வழியாக கோவா சென்றுள்ளதாகவும் பின்பு பாம்பே சென்று மீண்டும் மெட்ராஸ் திரும்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தனது முன்னாள் காதலியுடன் இருக்கும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவு தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.