Skip to main content

பெற்ற குழந்தையை துணிப்பையில் போட்டு சுடுகாட்டில் எறிந்த இளம்பெண்.... சிசிடிவியில் சிக்கி கைது!!

Published on 18/10/2018 | Edited on 18/10/2018

சென்னை போரூர் அருகே பிறந்து நான்கு நாளே ஆன பச்சிளம் குழந்தையை சுடுகாட்டில் வீசிவிட்டு சென்ற சம்பவத்தில் குழந்தையை பெற்ற தாயே வீசி சென்றது கண்டுபிடிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

child

 

சென்னை போரூரில் கடந்த 11-ஆம் தேதி காரம்பாக்கம் சுடுகாட்டில் துணிப்பைக்குள் பிறந்து நான்கு நாட்களே ஆனா குழந்தை ஒன்று தூக்கியெறியப்பட்டு கிடப்பதை கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை அடுத்து அங்கு வந்த வளசரவாக்கம் போலீசார் குழந்தையை கைப்பற்றி எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்தனர்.

 

child

 

விசாரணையில் சிக்கிய சிசிடிவி காட்சியில் இளம்பெண் ஒருவர் துணிப்பையில் குப்பையை கொட்டுவது போன்று சர்வ சாதாரணமாக எந்த ஒரு பதற்றமும் இல்லாமல் குழந்தையை சுடுகாட்டில் வீசி எறிந்தது பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்து தீவிர விசாரணையில் இறங்கிய போலீசார் காதலனால் ஏமாற்றப்பட்டு குழந்தை பெற்ற பெண் அதை மறைக்க பெற்ற குழந்தையை மனிதாபமானமின்றி தூக்கி எறிந்ததை கண்டுபிடித்தனர். இதனை அடுத்து குழந்தையை தூக்கி எறிந்த லாவண்யா என்ற பெண்ணை கைது செய்துள்ளனர் போலீசார். 

சார்ந்த செய்திகள்