Skip to main content

குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்... மகளையும் பேரனையும் போராடி மீட்ட பாட்டி!

Published on 06/04/2022 | Edited on 06/04/2022

 

police

 

இரண்டு வயது மகனுடன் தாய் தற்கொலை செய்து கொள்வதற்காக கிணற்றில் விழுந்த நிலையில், மகளின் உயிரையும் பேரனின் உயிரையும் காப்பாற்ற பாட்டி கிணற்றில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்துள்ளது பால்மடை பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த கார்த்திகா என்பவருக்கும் சக்திகுமார் என்பவருக்கும் 8 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஐ.டி நிறுவனத்தில் பணியாற்றி வந்த சக்திகுமார் கரோனா காலத்தில் வேலையிழந்ததால் மனமுடைந்து காணப்பட்டார். அதனைத்தொடர்ந்து அப்பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் சக்திகுமார். கணவன் தற்கொலைக்குப் பிறகு மனமுடைந்த கார்த்திகா தனியே தனது இரண்டு வயது மகனுடன் தாய் வீட்டில் வாழ்ந்து வந்தார். 

 

இதற்கிடையில் குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக திருமணத்தின் போது தன் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்த 21 பவுன் நகையை கொடுக்கும்படி மாமனார் மாமியாரிடம் கார்த்திகா கேட்டு வந்துள்ளார். ஆனால் சக்திகுமாரின்  தந்தை சுப்பிரமணியன் நகையை தர மறுத்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திகா கணவன் தற்கொலை செய்துகொண்ட அதே கிணற்றில் தனது இரண்டு வயது மகனுடன் குதித்துள்ளார். இதனைக் கண்ட கார்த்திகாவின் தாயார் சரஸ்வதி மகனையும் பேரனையும் காப்பாற்றும் நோக்கில் கிணற்றுக்குள் குதித்துள்ளார். பின்னர் கிணற்றில் இருந்த கயிறை பிடித்துக்கொண்ட சரஸ்வதி பேரன் மற்றும் மகளை கயிற்றால் இறுகி பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளார். மூவரும் கிணற்றுக்குள் குதித்தது தொடர்பாக தீயணைப்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கார்த்திகாவையும், அவரது 2 வயது மகனையும் இவர்கள் இருவரையும் காப்பாற்ற கிணற்றில் குதித்த சரஸ்வதியையும் போராடி மீட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தங்கைக்கு டி.வி, மோதிரம் வழங்க விரும்பிய அண்ணன்; கடைசியில் நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
incident happened on Brother wanted to give TV, ring to younger sister

உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திர பிரகாஷ் மிஸ்ரா (35). இவரது மனைவி சாபி. மிஸ்ராவுக்கு திருமணமாகாத தங்கை ஒருவர் இருந்தார்.

இந்த நிலையில், மிஸ்ராவின் தங்கைக்கு வருகிற 26ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. தன் தங்கையின் திருமணத்திற்காக தங்க மோதிரம், டி.வி உள்ளிட்ட பொருட்களை வழங்க மிஸ்ரா விருப்பப்பட்டார். இந்த முடிவை மிஸ்ரா தனது மனைவி சாபியிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அதற்கு சாபி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால், இவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதில் ஆத்திரமடைந்த சாபி, தனது கணவரை பழிவாங்க வேண்டும் என்பதற்காக தனது சகோதர்களை அழைத்ததாகக் கூறப்படுகிறது. அதன் பேரில், அங்கு வந்த அவர்கள், இது குறித்து மிஸ்ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், அந்தப் பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் தகராறில் முடிந்துள்ளது. இதில், சாமியின் சகோதரர்கள், மிஸ்ராவை கம்பு உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் மிஸ்ரா படுகாயமடைந்ததால் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் மிஸ்ராவை கொலை செய்த மனைவி சாபி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.