Advertisment

மூன்று மகள்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்!

Mother who tried to commit suicide with three daughters

Advertisment

திருச்சி மாவட்டம், புத்தாநத்தத்தை அடுத்த திருநெல்லிப்பட்டி அருகே உள்ள சின்னக்கோன்களத்துப் பட்டியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி பாலுசாமி. இவரது மனைவி சத்தியப் பிரியா (24). இந்த தம்பதியினருக்கு குணஸ்ரீ (6), ஷாலினி (4), மீனாட்சி (1) ஆகிய 3 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் குடும்ப வறுமை காரணமாக சத்தியப் பிரியா வேலைக்குச் செல்ல விரும்பினார்.

இதுபற்றி தனது கணவரிடம் தெரிவித்தபோது, அதற்கு பாலுசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் கணவன் – மனைவிக்கு இடையே நேற்று (28.07.2021) இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மிகுந்த மனவேதனை அடைந்த சத்தியப் பிரியா, கரையான் மருந்தைத் தன்னுடைய 3 மகள்களுக்கும் கொடுத்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். இதையறிந்த குடும்பத்தினர், 4 பேரையும் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரனை செய்துவருகின்றனர்.

incident trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe