Skip to main content

மகனுடன் தாய் தற்கொலை...

Published on 09/09/2020 | Edited on 09/09/2020

 

mother son incident in viluppuram


விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகில் உள்ளது கீழ்வாலை கிராமம். இந்த ஊரைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (30). இவருக்கும் ஓசூரை சேர்ந்த புஷ்பா (27) ஆகிய இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு மகள், நான்கு வயதில் மணிகண்டன் எனும் மகன் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். கன்னியப்பன் சென்னையில் கேஸ் சிலிண்டர் சப்ளை செய்யும் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். தற்போது கீழ்வாலையில் உள்ள தங்கள் கூரை வீட்டை மாடி வீடாக கட்டி வருகின்றனர். இதற்காக கன்னியப்பன் சென்னையிலிருந்து கீழ்வாலை கிராமத்திற்கு அடிக்கடி வந்து  சென்றுள்ளார். 

 

அதன்படி கீழ்வாலை கிராமத்திற்கு நேற்று முன்தினம் இரவு வந்துள்ளார். அப்போது கன்னியப்பன் மது போதையுடன் வீட்டிற்கு வந்துள்ளார். அவரது நிலையை  பார்த்த மனைவி புஷ்பா கணவரை திட்டியுள்ளார். ’இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக வாழ்க்கையில் முன்னேறி ஒரு வீடு கட்டும் அளவிற்கு உயர்ந்துள்ளோம். இப்படிப்பட்ட நிலையில் குடிபோதைக்கு அடிமையானால் எப்படி வீட்டை கட்டி முடிக்க முடியும்’ என்று புஷ்பா கூறியுள்ளார். 

 


இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் மனமுடைந்த புஷ்பா, இரவு ஒன்பது மணிக்கு மேல் கணவர் மீது ஏற்பட்ட கோபத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வது என்ற முடிவுடன் இரு குழந்தைகளுடன் வீட்டுக்கு அருகில் இருந்த விவசாய கிணற்றுக்கு சென்றுள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் புஷ்பாவை தடுத்து சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். குடும்பத்தினர் அனைவரும் தூங்கிய பிறகு கோபம் தணியாத புஷ்பா தூங்கிக்கொண்டிருந்த தனது  4 வயது மகன் மணிகண்டனை மட்டும் தூக்கிக்கொண்டு நள்ளிரவு நேரத்தில் சத்தமில்லாமல் ஊருக்கு அருகிலுள்ள குளிர் சுனை என்ற இடத்தில் உள்ள ஏழுமலை என்பவரின் விவசாய கிணற்றுக்கு சென்று தன் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இரவு இரண்டு மணிக்கு மேல் போதை தெளிந்து எழுந்து பார்த்த கன்னியப்பன் தன் மனைவியும் குழந்தையும் காணாமல் தேடியிருக்கிறார். அதோடு உறவினர்களை எழுப்பி விஷயத்தைச் சொல்ல அவரது உறவினர்களும் ஊர் மக்களும் திரண்டு சென்று புஷ்பாவையும் குழந்தையும் தேடினார்கள்.  அப்படி தேடி செல்லும் போது விவசாயி ஏழுமலையின் கிணற்றின் அருகில் புஷ்பா பயன்படுத்திய செல்போன் கிடந்துள்ளது.

 

இதனால் சந்தேகமடைந்த ஊர்மக்கள் வேட்டவலம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் விரைந்து வந்து கிணற்றில் இறங்கி தேடினார்கள்.  கிணற்றிலிருந்து புஷ்பாவையும் அவரது நான்கு வயது மகன் மணிகண்டன் ஆகிய இருவரையும் சடலமாக மீட்டனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் குமார் கொடுத்த புகாரின் பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாய் தன் மகனோடு தற்கொலை செய்து கொண்டதற்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாயும் அவரது மகனும் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கீழ்வாலை கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

கள்ளக்குறிச்சி திமுக வேட்பாளர் மலையரசன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணி கட்சிகள், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ஜெய்கணேஷ், சேலம் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர். சிவலிங்கம், சிபிஐ, சிபிஎம், முஸ்லீம் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் வந்தனர். 

அதேபோல் அதிமுக மாவட்டச் செயலாளரும் வேட்பாளருமான குமரகுரு கூட்டணி கட்சியான தேமுதிக நிர்வாகிகளுடன் சென்று தேர்தல் அதிகாரி ஷரவண்குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக, அதிமுக கட்சி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ததால் இரு கட்சி மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சி நகரில் நிரம்பி வழிந்தது.

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை. ரவிக்குமார் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவரும் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலருமான பழனியிடம் வழங்கினார். ரவிக்குமாருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, விசிக பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி, காங்கிரஸ் கட்சியின் குலாம் மொய்தீன் உட்பட கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர். 

அதேபோல் பா.ம.க. வேட்பாளர் முரளி சங்கர் பாமக மற்றும் பிஜேபி கட்சி நிர்வாகிகளுடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். இவரைத் தொடர்ந்து அதிமுக சார்பில் போட்டியிடும் மாவட்ட மாணவர் அணி செயலாளர் காந்தலவாடி பாக்யராஜ், அதிமுக மாவட்டச் செயலாளர் சண்முகம், தேமுதிக மாவட்டச் செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்டோருடன் சென்று வேட்புமனு தாக்கல் செய்தார். 

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.