Skip to main content

தாய் இறந்ததால் மகனும் உயிரிழப்பு;  அடுத்தடுத்து நேர்ந்த சோகம் 

Published on 18/10/2023 | Edited on 18/10/2023

 

Mother passed away in Ranipet, son also lost his life

 

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் வட்டம், தலங்கை ரயில் நிலையம் அடுத்துள்ள கீழ்கரடிகுப்பம் கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (75). வயது முதிர்வு காரணமாக உடல்நிலை சரியில்லாமல் வீட்டில் இருந்தவர் அக்டோபர் 17 ஆம் தேதி மதியம் 2.30 மணிக்கு இறந்தார்.

 

இதையடுத்து, தாயின் சடலத்தை கட்டிப்பிடித்தபடி அழுது கொண்டிருந்த அவரது மகன் ஜேசிபி ஓட்டுநர் 45 வயதான குமார்க்கு மாலை 7 மணிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே, உறவினர்கள் அவரை வாலாஜாப்பேட்டை மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.

 

அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே குமார் இறந்துவிட்டதாகக் கூறினர். தாய் இறந்த அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்டு, மகனும் இறந்த சம்பவம் கீழ்கரடிகுப்பம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. இறந்த தனலட்சுமியின் பேரனும், அதிர்ச்சியில் இறந்த குமாரின் மகனுமான கிருஷ்ணகாந்த் (21), சில மாதங்களுக்கு முன்பு ஆற்காடு பாலாற்று பாலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்