Skip to main content

மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்; வாயில் கொசு மருந்து ஊற்றிய கொடூரம் 

Published on 13/03/2023 | Edited on 13/03/2023

 

Mother-in-law threw acid on daughter-in-law

 

விருத்தாசலத்தில் மருமகளின் மீது ஆசிட் மற்றும் கொசு விரட்டி மருந்தை ஊற்றிக் கொல்ல முயன்ற மாமியாரின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கலியவரதன் என்பவரின் மனைவி ஆண்டாள்(வயது 55). இவர்களது மகன் முகேஷ்ராஜுக்கு தனது அண்ணன் ஆழ்வார் என்பவரின் மகளான கிருத்திகாவை கடந்த  7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார் ஆண்டாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கிருத்திகாவின் கணவரான முகேஷ்ராஜ் அவிநாசியில் வேலை செய்து வரும் நிலையில், விடுமுறை நாட்களுக்கு மட்டும் வீட்டிற்கு வந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

 

Mother-in-law threw acid on daughter-in-law

 

இந்நிலையில் நேற்றிரவு வீட்டில் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த கிருத்திகா மீது அவரது நடத்தையில் சந்தேகப்பட்டு மாமியார் ஆண்டாள், பாத்ரூம் கழுவப் பயன்படுத்தும் ஆசிட்டை கிருத்திகாவின் முகம், கண்கள், காது, உடல் மற்றும் பிறப்புறுப்பு ஆகிய இடங்களில் ஊற்றியுள்ளார். மேலும் இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் கொசு விரட்டி மருந்தை வாயில் ஊற்றிக் கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனால் கிருத்திகா வலியால் கதறித் துடிக்கும் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் தீயணைப்புத் துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

 

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் பாதிக்கப்பட்ட கிருத்திகாவை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி சிகிச்சை செய்து, மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி கொண்டு சென்றனர். இச்சம்பவத்தில் கிருத்திகாவின் வலது கண் பார்வை இழந்துவிட்டதால்  புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விருத்தாசலம் காவல்துறையினர் வழக்குப் பதிந்து ஆண்டாள் மற்றும் அவரது கணவர் கலியவரதனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நடத்தையில் சந்தேகப்பட்டு மருமகள் மீது மாமியார் பாத்ரூம் ஆசிட் வீசி கொலை செய்ய முற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.