ADVERTISEMENT

இரு பெண் குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்த தாய்; ராணிப்பேட்டையில் பரபரப்பு

12:32 PM Feb 27, 2024 | kalaimohan

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அடுத்துள்ள வேலம் பகுதியைச் சேர்ந்தவர் அறிவழகன். ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் அறிவழகன். அவரின் இரண்டாவது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

ADVERTISEMENT

அறிவழகனின் முதல் மனைவி விஜயலட்சுமி .கருத்து வேறுபாடு ஏற்பட்டது காரணமாக இவர்கள் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் இருந்தது. இந்த வழக்கு சென்ற வாரம் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் முதல் மனைவி விஜயலட்சுமி தன்னுடன் வாழ வேண்டும் என அறிவழகனின் சொந்த ஊரான வேலம் பகுதிக்கு வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இரண்டாவது மனைவி வெண்ணிலா மற்றும் அவரின் பெண் குழந்தைகள் இருவருடன் வாலாஜா ரோடு காட்பாடி வழியாக சென்னை செல்லும் அந்தியோதயா விரைவு ரயில் முன்பு பாய்ந்தார். தாய் மற்றும் பெண் குழந்தைகள் இருவர் என மூவரும் இறந்ததாக தகவல்கள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மூன்று பேரின் உடல்களை மீட்ட ரயில்வே போலீசார் உடல்களைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT