Skip to main content

பிள்ளையைப் பிரிய மனமில்லாத தாய்; வாகனத்தின் பின்னாடியே ஓடிய குதிரையின் வீடியோ வைரல்

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

mother horse running behind vehicle carrying her foal has gone viralsocial media

 

‘என் குழந்தையை என்கிட்ட கொடுத்துடுங்க..’ என்பது போல், தனது குட்டியை அழைத்துச் சென்றதால், கார்ப்பரேஷன் வாகனம் பின்னாடியே ஓடிவந்த தாய்க்குத்திறையின் நெகிழ்ச்சியான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

 

மதுரை மாநகராட்சியைச் சுற்றியுள்ள பகுதிகள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். மேலும், மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படும் தென்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், மாடுகளும், குதிரைகளும் சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறது. இதனால், அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும், கடுமையான அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

 

அதுமட்டுமின்றி, இத்தகைய கால்நடைகளும், குதிரைகளும் இரவு, பகல் என நேரம் பாராமல் சுற்றித்திரிவதால் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சில நேரங்களில் விபத்துகளும் ஏற்படுகின்றன. இதையடுத்து, பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில்,  மதுரையில் வைகை, தென்கரை பகுதிகளில் போக்குவரத்திற்கு இடையூறாக சுற்றித்திரியும் குதிரைகளை மாநகராட்சி பணியாளர்கள் அப்புறப்படுத்தியுள்ளனர். மேலும், குதிரைகளை சாலையில் நடமாடவிட்ட அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

 

அந்த சமயத்தில், ஒரு குட்டித் குதிரையை வாகனத்தில் பிடித்துச்சென்றனர். அப்போது அதைப்பார்த்த தாய் குதிரை தனது குட்டியைப் பிரிய மனமில்லாமல் வாகனத்தின் பின்னாலேயே ஓடி வந்தது. இதைப்பார்த்த சாலை வாசிகள், ஆச்சரியத்தில் வாயை பொளந்தனர். மேலும், அந்த தாய் குதிரை தென்கரை பகுதியிலிருந்து மாநகராட்சி கால்நடை காப்பகம் வரை மாநகராட்சி வாகனத்தின் பின்னாலேயே ஓடி வந்து தனது குட்டியுடன் சேர்ந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“ஜெயிச்ச கையோட வேற கட்சிக்கு போயிடாதீங்க...” - செல்லூர் ராஜு கிண்டல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Don't go to another party after winning'- Sellur Raju teased

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகம் நடைபெற்று வரும் நிலையில், மதுரையில் அதிமுக வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மருத்துவர் சரவணனை ஆதரித்து  மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜு பேசிக்கொண்டிருந்தபோது வேட்பாளர் சரவணன் கைகூப்பியபடி சிரித்தார். அதைப் பார்த்த செல்லூர் ராஜு,  'வலிக்கிற மாதிரி ஊசி போட்டுடாதீங்க. வலிக்காமல் ஊசி போடுங்க. தலைமை சொல்லிவிட்டால் அந்த கட்டளை தான் எல்லாமே. வேறு எதுவும் கிடையாது. இது சாமி என்றால் சாமி. சாமி இல்லை இது சாணி என்றால் சாணி. நம்மைப் பொறுத்தவரை மதித்தால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். மரியாதை கொடுக்கவில்லை என்றால் மிதிப்போம்' எனப் பேசியவர், வேட்பாளர் சரவணன் பல்வேறு கட்சிகளுக்கு சென்று வந்தவர் எனக் குறிப்பிட்டு பேசியதோடு 'ஜெயித்த பிறகு வேறு கட்சிக்கு போய் விடக்கூடாது' என கிண்டலாகப் பேசினார்.