Advertisment

சிறுமையைக் கடத்திச்சென்ற வாலிபருக்கு 'போக்சோ'!

mother got shocked after when her daughter missed within night

Advertisment

கடலூர் மாவட்டம்,விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி சாத்தமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு, மாதா கோவில் திருவிழாவிற்கு ரேடியோ சவுண்ட் சர்வீஸ் வேலைக்காக வந்த அரசக்குழி கிராமத்தைச்சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவரது மகன் அஜித்(25) என்பவர்,சிறுமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.

சிறுமியின் தாயார் காலையில் எழுந்து பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. இதுகுறித்து அதிர்ச்சியடைந்த அச்சிறுமியின் தாயார், காணாமல்போன தன் மகளைக் கண்டுபிடித்து, கடத்திச் சென்ற அஜீத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, விருத்தாசலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் அஜித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில், அஜித்தின் செல்ஃபோன் நம்பரை பின்தொடர்ந்த விருத்தாசலம் காவல்துறையினர், தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அஜித்திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் இருப்பதைக் கண்டுபிடித்து, அவரைக் கைதுசெய்தனர். மேலும், அந்தச் சிறுமியை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, கைதுசெய்த அஜித்தைவிருத்தாசலம் சட்டம்- ஒழுங்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.இன்று அதிகாலை பணியில் இருந்த காவலர்களின் கவனக்குறைவைச்சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டஅஜித், காவல் நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார். இதனைத் தொடர்ந்து, தீவிரத் தேடுதலில் ஈடுபட்ட போலீசார்,அஜித்தை மீண்டும் கைதுசெய்துபோக்சோ சட்டத்தின் கீழ்சிறையில் அடைத்துள்ளனர்.

Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe