ADVERTISEMENT

108 ஆம்புலன்ஸில் குழந்தை பெற்றெடுத்த தாய்! 

05:54 PM Apr 04, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அருகே உள்ள சின்னகொசப் பள்ளம் ஊரைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மனைவி அனு வித்யா(23). இவர்களுக்கு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார் அனுவித்யா. இந்த நிலையில் நேற்று கணபதி குறிச்சி கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு மருத்துவ ஆலோசனை பெறுவதற்காக அனு வித்யாவை உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அப்போது ஆரம்பச் சுகாதார நிலையத்தில் அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்ப்பதற்கான போதிய வசதி இல்லாத காரணத்தால், உடனடியாக பெண்ணாடத்திலிருந்து 108 ஆம்புலன்சை வரவழைத்து அதில் வித்யாவை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.

நந்தப்பாடி அருகே 108 ஆம்புலன்ஸ் சென்றுகொண்டிருந்தபோது, அனு வித்யா பிரசவ வலியால் துடித்து உள்ளார். இதைக் கண்ட ஆம்புலன்ஸ் டிரைவர் ஆம்புலன்சை ஒரு ஓரமாக நிறுத்தினார். அப்போது ஆம்புலன்சில் இருந்த மருத்துவ தொழில்நுட்ப உதவியாளர் ரேவதி, செவிலியர் சிவரஞ்சனி இருவரும் அனு வித்யாவிற்கு பிரசவம் பார்த்தனர். அவருக்கு அழகான ஒரு பெண்குழந்தை பிறந்தது. பின்னர் தாயும் குழந்தையும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT