Skip to main content

‘அம்மா என்பது அழகு’ ‘மம்மி என்பது உயிரற்ற சடலம்’ : நல்லக்கண்ணு பேச்சு

Published on 04/10/2018 | Edited on 04/10/2018
nallakkannu



ஏழை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் உருவாக்கப்பட்ட அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று கொத்தமங்கலத்தில் நடந்த கலை விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பேசினார்.
 

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலத்தில் தமிழ்நாடு கலைஇலக்கிய பெருமன்றம் சார்பில் கலை விழா, நூல் வெளியீடு, கல்வியாளர்கள், சமூக சேவகர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு சிவானந்தம் தலைமையில் முன்னால் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் சிவலிங்கம் முன்னிலையில் நடந்தது. தங்கராசு வரவேற்றார். 
 

விழாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு கலந்து கொண்டு கவிஞர் துரைமாணிக்கம் எழுதிய புத்தகத்தை வெளியிட்டு விருது பெற்ற ஆசிரியர்கள், மாணவர்கள், சமூக சேவகர்கள், பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பேசினார். 
 

நல்லக்கண்ணு பேசியதாவது, ஒருவர் வயது முதிர்ந்துவிட்டாலே அவர்களை காணாமல் செல்லும் இந்த காலத்தில் ஆலங்குடி கணேசன் 5154 சடலங்களை தூக்கி சுமந்திருக்கிறார் என்றும், மற்றொருவர் டாக்டர் ராமதாஸ் ஆதரவற்றவர்களின் சடலங்களை சொந்த முயற்சியில் அடக்கம் செய்து வருகிறார் என்பதை கேட்டு அவர்களுக்கு நான் கொடுத்த நினைவு பரிசு என்பது மிகவும் உயர்ந்த பரிசாக நினைக்கிறேன். இது பொன்றவர்கள் இன்னும் இந்த நாட்டுக்கு தேவை. 
 

தமிழக அரசு ஆயிரத்திற்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகளை மூட திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. மாணவர்கள் குறைவாக உள்ளார்கள் என்றால் கல்வியை தரமாக்கி அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஏழை மாணவர்களும் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக காமராஜர் கிராமங்கள் தோறும் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அதை நாம் மூடுவது நல்லதல்ல. அதனால் அரசு பள்ளிகளை மூடுவதை விட தரமான கல்வி கொடுக்கம் ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
 

பெற்றோர்களும் அம்மா என்று அழைப்பதை விட மம்மி என்று அழைப்பதை வரவேற்று தங்கள் குழந்தைகளை ஆங்கிலப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள். ‘அம்மா என்பது அழகு’  ‘மம்மி என்பது உயிரற்ற சடலம்’ என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ளுங்கள். தாய்மொழிக் கல்வி தான் சிறந்தது என்று பேசினார்.
 

தொடர்ந்து கவிஞர் புத்திரசிகாமணி தலைமையில் கவியரங்கம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. விழாவில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் சாமி.சத்தியமூர்த்தி, திராவிடச் செல்வம் (பொறுப்பு) மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா முடிவில் செல்வராசு நன்றி கூறினார்.



 

சார்ந்த செய்திகள்

Next Story

இந்திய கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்ணு மருத்துவமனையில் அனுமதி!

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

Indian Comm., senior leader Nallakannu admitted to hospital!

 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திர போராட்ட தியாகியுமான நல்லகண்ணு (வயது 95) அரசியல் வாழ்க்கையில் அனைவராலும் விரும்பக் கூடிய தலைவர்களில் ஒருவர். அவரை கௌரவிக்கும் வகையில், 75- வது இந்திய சுதந்திர தின விழாவின்போது, நல்லகண்ணுவுக்கு 'தகைசால் தமிழர்' விருதினை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். எனினும், தனக்கு விருதுடன் கிடைத்த 10 லட்சம் ரூபாய் பணத்தை தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கே திருப்பிக் கொடுத்தார்.

 

வயது மூப்பு காரணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொள்ளாமல் இருந்தார். இந்த நிலையில், வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தீவிர காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவர், இன்று (01/10/2022) சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  அவரின் உடல்நிலை பாதிப்பு குறித்து பரிசோதித்து வருவதாக ராஜீவ் காந்தி மருத்துவமனையின் முதல்வர் தேரணி ராஜன் தெரிவித்துள்ளார்.

 

அவர் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப தமிழக அரசியல் தலைவர்களும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைத்து தரப்பினரும் வேண்டியுள்ளனர்.

 

இதனிடையே, மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க ஆளுநரான இல.கணேசனுக்கு இன்று (01/10/2022) மாலை ஏற்பட்ட திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Next Story

சமூகத்தில் எளிய மனிதர் என பெயரெடுத்தவருக்கு இந்த அரசு கொடுத்திருக்கும் நிலை வருத்தத்தை தருகிறது- அய்யாசாமி

Published on 11/05/2019 | Edited on 12/05/2019

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு இதுநாள் வரை அரசு ஒதுக்கியிருந்த வீட்டை காலி செய்ய கூறி நோட்டீஸ் விட்டுள்ளதையொட்டி அவர் அரசு ஆணையை மதித்து வீட்டை காலி செய்து, வேறு வாடகை வீட்டிற்கு இடம் பெயர்ந்துள்ளார்.  இந்த செய்தி தமிழக மக்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.  இந்நிலையில்  அவரது உறவினரும்,நலம்விரும்பியுமான ஐய்யாசாமி கூறுகையில்,

 

nallakannu

 

நல்லகண்ணு ஐயா 2006வது வருடம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு இல்லாமல் கஷ்டப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திடமிருந்து வாங்கினார். இதுவரை 13 வருடங்கள் ஆகிறது. இவ்வளவு வருடமாக சரியான நேரத்தில் வாடகை செலுத்தி வருகிறார். தண்ணீர் வரி கட்டி வருகிறார். எந்த ஒரு குறையும் அவர் வைக்கவில்லை. இந்த வீட்டுக்காக கிட்டத்தட்ட அவர் 5 லட்சம் வரை செலவு செய்திருக்கிறார். முன் கேட் அமைப்பது காம்பவுண்ட் கட்டுவது போன்ற பணிகளுக்காக செலவு செய்திருக்கிறார். இவருடன் வீடு வாங்கியவர்கள் பாதிப்பேர் வெளியில் சென்று விட்டு வீட்டை வாடகைக்கு விட்டனர்.

 

nallakannu

 

சிலர் வீடுகளை டிராவல்ஸ் ஆஃபீஸாக மாற்றி உபயோகப்படுத்தி வந்தனர். ஆனால் இப்படிப்பட்ட நிலையில் நல்லகண்ணு ஐயா குடும்பத்திற்காக மட்டுமின்றி கட்சிக்காரர்கள், தொண்டர்கள் வந்தால் சந்திப்பதற்கான வீடாக வைத்திருந்தார். வீட்டை காலி செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்த போது அக்கம் பக்கத்தில் இருந்த வீட்டினர் கோர்ட்டில் ஸ்டே  வாங்க கேஸ் போட்டார்கள். ஆனால் நல்லகண்ணு அய்யா மட்டும் அதுபோன்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவருடைய சொந்த வீடாக இருந்தால் எப்படி இருக்குமோ அதுபோலதான் அந்த வீட்டையும் பார்த்துக் கொண்டார்.

 

nallakannu

 

 

 

nallakannu

 

அவர் ஒரு அரசியல் கட்சித் தலைவர் என்பதைவிட சுதந்திர போராட்ட வீரர். அவருக்கு 92 வயதாகிறது இவ்வளவு வருடமாக இருந்து விட்டார். சமூகத்தில் நல்ல ஒரு எளிமையான மனிதர் என பெயரெடுத்தவர் இப்படி இருக்கும் நிலையில் இந்த வீடு நிலம் அரசுக்கு தேவைப்பட்டிருக்கிறது என்றால்  வீட்டு வசதி வாரியத்தின் துணை கொண்டு மாற்று இடத்தை கொடுத்திருக்கலாம். அதை விட்டுவிட்டு வீட்டை காலி செய்யுங்கள் வெளியே போங்கள் என்று கேவலமாக தமிழ்நாடு அரசு நடந்து கொண்டு இருக்கிறது ரொம்ப வருத்தத்தை தருகிறது என்றார்.