Skip to main content

“அப்பாவ நம்பாதடா; என் சாவுக்கு அவர்தான் காரணம்” - மகனுக்கு ஆடியோ அனுப்பிவிட்டு தற்கொலை செய்துகொண்ட தாய்

Published on 29/12/2022 | Edited on 30/12/2022

 

Mother attend tragedy after sending audio to son

 

சிவகங்கை மாவட்டம் கருதுபட்டியைச் சேர்ந்தவர் பாண்டியன். 40 வயதான பாண்டியன் கருதுபட்டியில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வந்துள்ளார். பாண்டியனின் மனைவி மகேஸ்வரி. இத்தம்பதிக்கு 16 மற்றும் 9 வயதில் இரு மகன்கள் உள்ளனர். 

 

பாண்டியன் தனியாக மினரல் வாட்டர் கம்பெனியை துவங்குவதற்கு முன் தன் மகன்களின் கல்விக்காக குடும்பத்துடன் சென்னையில் வசித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தனது சொந்த ஊரில் கம்பெனியைத் துவங்கியதும் பாண்டியன் தனது சொந்த ஊரிலேயே தங்கிவிட்டார். மகேஸ்வரி தனது மகன்களின் கல்விக்காக சென்னையில் வசித்து வந்துள்ளார்.

 

இந்நிலையில் மகேஸ்வரிக்கு தனது கணவர் பாண்டியனின் நடத்தையில் சந்தேகம் வந்ததாகவும் இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகிறது. இரண்டு தினங்களுக்கு முன் தனது இளைய மகனுடன் கருதுபட்டிக்கு மகேஸ்வரி வந்துள்ளார். அன்றும் தனது கணவனுடன் வாக்குவாதம் எழுந்துள்ளது. 

 

இதனால் மனமுடைந்த மகேஸ்வரி தற்கொலை செய்ய தீர்மானித்துள்ளார். தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது மூத்த மகனுக்கு வாட்ஸ்ஆப்பில் குரல் பதிவு ஒன்றையும் மகேஸ்வரி அனுப்பியுள்ளார். அதில், “நான் சாகப் போகிறேன் நீ தம்பியை நல்லபடியாக பார்த்துக் கொள். சென்னையில் உள்ள நம் பிளாட்டை விற்று நீயும் நன்கு படித்து தம்பியையும் படிக்க வைத்து விடு. மாமா சிவா சொல்வதைக் கேள். என்னை மன்னித்து விடு. உங்க அப்பாவை நம்பாதே. என் சாவுக்கு அவர்தான் காரணம்” என அழுதுகொண்டே கூறியுள்ளார். இதன் பின் மகேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். 

 

ஆடியோவை கைப்பற்றிய சிவகங்கை காவல்துறையினர் பாண்டியனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; போலீசார் விசாரணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
nn

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வீட்டில் தனியாக இருந்த பெண் ஒருவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதியைச் சேர்ந்தவர் குமார். ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியரான இவர் நேற்று வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் ஹாலில் அவருடைய மனைவி சரஸ்வதி வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த குமார் கூச்சலிட்டுள்ளார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்த சரஸ்வதியின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மர்ம நபர்கள் சரஸ்வதியை வெட்டிப் படுகொலை செய்துவிட்டு அவர் கழுத்தில் இருந்த தங்க நகையைப் பறித்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இருப்பினும் இந்த கொலை, நகைக்காக நடந்ததா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதப் பிரச்சனை காரணமாக நிகழ்ந்ததா என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது