Skip to main content

பிறந்த நேரம் சரியில்லை என 4 மாத குழந்தையைக் கொன்ற தாய் கைது!

Published on 24/03/2022 | Edited on 24/03/2022

 

 Mother arrested for BABY incident in pazhani

 

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையில் குழந்தை பிறந்த நேரம் சரியில்லாததால் பிரச்சனை ஏற்படுவதாக சொன்ன ஜோசியரின் பேச்சைக் கேட்டு தாய் தான் பெற்ற 4 மாத குழந்தையைக் கொன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 

பழனி அருகே உள்ள ராசாபுரம் ஊராட்சி  இரண்டாவது வார்டை சேர்ந்தவர்கள் மகேஷ்வரன்-லதா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் ஆண் குழந்தையும், பிறந்து நான்கே மாதமான ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் நேற்று மகேஷ் வேலைக்குச் சென்றிருந்த நிலையில் தாய் லதா நான்கு மாத குழந்தை கோகுலுடன் வீட்டிலிருந்துள்ளார். கழிவறைக்குச் சென்று வந்த நேரத்தில் குழந்தையை காணவில்லை என லதா அக்கம் பக்கத்தினரிடம் கூறியுள்ளார். பிறகு குழந்தையை உறவினர்கள் சேர்ந்து தேடிய நிலையில் அருகிலிருந்த ஆற்றின் கரையில் செடிகளுக்கு நடுவே குழந்தை இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனே குழந்தையின் உடல் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது. அதன்பின் தாலுகா போலீசார் குழந்தையின் பெற்றோரிடம் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் குழந்தையின் தாய் லதா முன்னுக்குப்பின் முரணான தகவலை அளித்த நிலையில், சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையைத் தீவிரப்படுத்தியபோது அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது. குடும்பத்தில் அடிக்கடி ஏற்படும் பிரச்சனைக்கு உங்கள் மகன் பிறந்த நேரம் சரியில்லாததே காரணம் என ஜோசியர் கூறியதை கேட்ட தாய் லதா, கொடூர மனதுடன் பெற்ற நான்கு மாத மகனை ஆற்றின் கரைக்கு அழைத்துச் சென்று கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. தற்பொழுது கொடூர தாய் லதாவை போலீசார் கைது செய்து சிறையிலடைத்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.