Advertisment

8 மாதக் குழந்தையுடன் கிணற்றில் குதித்த தாய்

mother and son passed away

Advertisment

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே 8 மாதக் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றஇளம் பெண் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

அண்ணாபுரம் வடக்குக் காடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மனைவியின் பெயர் தேன்மொழி. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் கடந்த பின் ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் தேன்மொழி குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்றுகிணற்றில்குதித்ததாக கூறப்படுகிறது. குழந்தையின் அலறல் சத்தம் மற்றும் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வந்த அப்பகுதி மக்கள் இருவரையும் மீட்டனர்.

Advertisment

எனினும் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனர்.

incident police selam
இதையும் படியுங்கள்
Subscribe