Skip to main content

குடும்பத்தைப் பற்றி கவலைப்படாத கணவன்... மகள்களுடன் வீட்டை விட்டு வெளியேறிய தாய்... சோகத்தில் மூழ்கிய கிராமம்

Published on 24/09/2020 | Edited on 24/09/2020

 

Mother and daughters issue in viluppuram

 

 

விழுப்புரம் நகரையொட்டி உள்ளது சித்தேரி கரைப்பகுதி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் கஜேந்திரன். கட்டிட தொழிலாளியான இவருக்கு கவிதா என்ற மனைவியும் 17 வயதிலும் 13 வயதிலும் இருமகள்கள் உள்ளனர்.  

 

இளைய மகள் ஏழாம் வகுப்பும், மூத்த மகள் பதினோறாம் வகுப்பும் படிக்கின்றனர். கவிதாவின் கணவர் கஜேந்திரன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கஜேந்திரன் வேலைக்கும் செல்லாமல் குடும்ப செலவுக்கும் பணம் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். 

 

இதனால் இவருடைய மனைவி கவிதா தன் இரு பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் வறுமையில் போராடியுள்ளார். இந்த நிலையில் கவிதா தனக்கு தெரிந்த அக்கம்பக்கத்தினர்களிடம் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர். வாங்கிய கடனை கொடுக்க முடியாமல், கணவர் பொறுப்பற்ற முறையில் தினமும் குடித்துவிட்டு வருவதாலும் போதிய வருமானம் இல்லாமலும் இரு மகள்களையும் காப்பாற்ற முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்த கவிதா, மிகுந்த மன வேதனை அடைந்தார். 

 

இதனால் கவிதாவுக்கும் அவரது கணவர் கஜேந்திரனுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டுள்ளது. கோபத்துடன் கஜேந்திரன் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். மனவேதனை அடைந்த கவிதா இரண்டு மகள்களையும் அழைத்துக்கொண்டு காகுப்பம் பகுதியில் உள்ள அய்யனாரப்பன் கோவிலுக்கு சென்று வருவதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறிவிட்டு சென்றுள்ளார். 

 

அப்படி சென்ற மூவரும் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், உறவினர்கள் கவிதாவையும் அவரது மகள்களையும் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். அவர்களைப் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. நேற்று அதிகாலை விழுப்புரம் அடுத்துள்ள உத்தம்பாளையம் ரயில்வே தண்டவாளம் அருகே கவிதா மற்றும் அவரது மகள்கள் இருவர் ஆகிய 3 பேரும் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். 

 

அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்துவிட்டு போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். அதனையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதா கிருஷ்ணன் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கவிதா உள்ளிட்ட 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த மூன்று பேரையும் பரிசோதனை செய்த டாக்டர்கள் மூவரும் விஷம் குடித்திருப்பதும் இதில் கவிதாவும் அவரது மூத்த மகளும் ஏற்கனவே இறந்துவிட்டதாகவும் இளைய மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறியுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. 

 

இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கஜேந்திரன் தினசரி குடித்துவிட்டு பொறுப்பற்ற நிலையில் மனைவி மகள்களை காப்பாற்றாமல் ஊர் சுற்றியதால் வறுமை தாங்க முடியாமல் மூவரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்துள்ளனர். இதில் கஜேந்திரன் மனைவி கவிதாதான் மட்டும் இறந்துவிட்டால் இரு பெண்களையும் பொறுப்பில்லாமல் குடிகாரனாக சுற்றித்திரியும் தன் கணவன் காப்பாற்ற மாட்டார் என்று முடிவு செய்து. அவர் மகள்களுக்கும் விஷம் கொடுத்து மூவரும் விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துள்ளனர். இதில் 13 வயது இளைய மகள் மட்டும் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார். இந்த சம்பவம் குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கடன் தொல்லை கணவனின் பொறுப்பற்ற தன்மையால் வறுமையின் காரணமாகவும் தாய் இரண்டு மகள் தற்கொலை செய்துகொள்ள முடிவு எடுத்த சம்பவம் அதில் இருவர் இறந்து போனது அப்பகுதியில் உள்ள மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.