Skip to main content

‘பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வழி நடத்திச்சென்றாயே...’ - தாயின் சடலத்தின் மீது மரணித்த மகள்

Published on 26/11/2022 | Edited on 26/11/2022

 

mother and daughter passed away same day
தாய் - மகள்

 

‘அம்மா, உனக்கு கடைசிக்காலம் வரை தினமும் ஒரு வேளை சாப்பாட்டை என் கையால்தான் ஊட்டி விடுவேன்’ என்ற மகளின் அளவு கடந்த பாசத்தால், 31 ஆண்டுகளாக தன் மகளின் கையால்  சாப்பிட்டு வந்த தாய் திடீரென்று இறந்ததால், இறந்த தாயின் மாா்பில் விழுந்து தன் உயிரையும் மகள் மாய்த்துக்கொண்ட சம்பவம் குமாியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம், இரணியல் அருகே காற்றாடிமுக்கு பகுதியைச் சோ்ந்த நடேசன் மனைவி வேலம்மாள் (78) ஓய்வு பெற்ற அரசு பள்ளி ஆசிாியை. இவா்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் இருக்கின்றனர். ஒரே பெண் பிள்ளையான பகவதியம்மாளை (56) சிறு வயதில் இருந்தே தாயாா் வேலம்மாள் மிகுந்தப் பாசத்துடன் வளர்த்து வந்தார். அதே போல், மகள் பகவதியம்மாளும் வளர, வளர தாயார் மீது பிாியமாகவே இருந்து வந்தார்.

 

பகவதியம்மாளுக்கு திருமண வரன் பாா்த்தபோது கூட, தினமும் என் தாயாரை நான் பாா்க்க வேண்டும். அதற்கு வசதியாக வீட்டின் அருகில் வரன் பாருங்கள் என பகவதியம்மாள் கூறியதையடுத்து, வீட்டில் இருந்து 5 கி.மீ தூரத்தில் தலக்குளம் பகுதியைச் சோ்ந்த ராதாகிருஷ்ணன் என்பவருக்கு மணம் முடித்து வைத்தனா். இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர்.

 

பகவதியம்மாளுக்கு திருமணம் முடிந்த அடுத்த வாரத்திலிருந்தே, தனது வீட்டிலிருந்து தாயாருக்கு தினம் ஓரு வேளை, காலை அல்லது மதிய சாப்பாட்டை கொண்டு போய் அவரே ஊட்டி விட்டு வந்தார். இதைப் பாா்த்த அக்கம்பக்கத்தினா் கூட ஆச்சரியப்பட்டுள்ளனா். கணவன் வீட்டிலும் இதற்கு எந்த எதிா்ப்பும் காட்டவில்லை. அந்தளவு தாயும் மகளும் பாசத்தோடு இருப்பதை உறவினா்களும் ஊராரும் பெருமையோடு பேசி வந்தனா்.

 

இந்த சூழ்நிலையில் தான் வேலம்மாளுக்கு சில நாட்களாக உடல்நிலை சாியில்லாமல் இருந்தது. கடந்த 24 ஆம் தேதி மதியம், பகவதியம்மாள் தாயாருக்கு உணவு கொடுத்து விட்டு வீட்டிற்குச் சென்றாா். மறுநாள் 25 ஆம் தேதி காலை, தாயாருக்கு டிபன் கொடுக்க தயாா் செய்து கொண்டிருந்த போது, அவாின் சகோதரா் போன் செய்து அம்மா இறந்துவிட்டார் எனக் கூறியதை கேட்டு அதிர்ச்சியடைந்த பகவதியம்மாள், உடனே தாயாரைப் பார்க்கச் சென்றார்.

 

தாயாாின் உடலைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தவரை உறவினர்கள் ஒருபுறம் தேற்றிக்கொண்டிருந்தனா். இந்நிலையில், திடீரென்று பகவதியம்மாள் தாயாாின் மாா்பில் விழுந்து பேச்சு மூச்சின்றி கிடந்தாா். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினா்கள் பகவதியம்மாளை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

 

திருமணத்துக்கு முன்பே பிள்ளைகள் பெற்றோரை வெறுக்கும்  இந்த காலக்கட்டத்தில் திருமணம் முடிந்தும் கடைசி வரை தாய், மகள் பாசத்துக்கு கொஞ்சமும் குறை இல்லாமல் வாழ்ந்த வேலம்மாளும் பகவதியம்மாளும் தாய், மகள் பாசத்துக்கு இந்தக் காலத்தின் உதாரணமாகிவிட்டனா் என்கின்றனா் ஊராா்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாரத் மாதா கி ஜெ'- பாஜக மேடையில் முழங்கிய சரத்குமார்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
'Family monarch rule is happening in Tamil Nadu' - Sarathkumar speech

2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் அண்மையில் பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் சரத்குமார், ''57 ஆண்டுகள் தமிழகத்தில் இந்த திராவிட கட்சிகள் ஆட்சி செய்தன. அது என்ன திராவிடம் என்று புரியவில்லை. நான் ஒரு சில அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். திராவிடத்தை புரிந்து கொள்ளாமல் திராவிடம் திராவிடம் என்று சொல்லி ஒரு குடும்ப அரசியலும், மன்னர் ஆட்சியும் தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண தொண்டன், ஏழை எளிய தொண்டன் நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று வருவதற்கு, ஒரு தலைவன் ஆவதற்கு, ஒரு பதவியில் அமர்வதற்கு வாய்ப்பு இல்லாத இடத்தில் கையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.

பிரதமரை பற்றி நான் நெல்லையில் நடந்த கூட்டத்திலேயே சொன்னேன். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் இந்தியாவின் பெருமையை ஒரு தலைவன் எடுத்துச் சென்றிருக்கிறான் என்றால் அது பிரதமர் மோடி தான். அவருடைய வாழ்க்கை வரலாறு தெரியாதவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். ஒரு சிறந்த தலைவரை நாம் அடையாளம் காட்ட வேண்டும். ஒரு சிறந்த தலைவனுக்கு உழைப்பு இருக்க வேண்டும், உறுதி இருக்க வேண்டும், நியாயம் இருக்க வேண்டும், தர்மம் இருக்க வேண்டும், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்'' என்றார். தொடர்ந்து பேசிய அவர் பேச்சின் இறுதியில் ‘பாரத் மாதா கி ஜெ’ என மூன்று முறை முழங்கி தனது உரையை நிறைவு செய்தார்

Next Story

ஐந்தாம் முறையாக தமிழகம் வரும் மோடி

Published on 15/03/2024 | Edited on 15/03/2024
Modi is coming to Tamil Nadu for the fifth time

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.

இன்று அல்லது நாளை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்னும் சற்று நேரத்தில் கன்னியாகுமரி வர இருக்கும் பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். இந்த ஆண்டில் மட்டும் ஐந்தாவது முறையாக தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வந்திருக்கிறார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்துள்ள பிரதமர் மோடி அங்கிருந்து கன்னியாகுமரிக்கு ஹெலிகாப்டர் மூலமாக வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு மற்றும் காவல் துறை கண்காணிப்பு தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.