Skip to main content

வாட்ஸ்அப்பில் மார்ஃபிங் போட்டோ...செல்போன் அரக்கனால் உயிரிழந்த பள்ளி மாணவி

Published on 23/04/2019 | Edited on 23/04/2019

செல்போன் என்னும் அரக்கனால் இளம்பெண்கள் பாதிக்கப்படுவது மிகஅதிகமாகிவிட்டது. நவீன மாடல் கொண்ட செல்போன்களால் இளம்பெண்களை அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின், அனுமதியின்றியே போட்டோஎடுப்பது, அந்த போட்டோக்களை வைத்து மார்பிங் செய்து தங்களின் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்புவது போன்ற குற்றச்செயல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது., இதில் பெண்கள் தொடர்ந்து பாதிக்கப்படுவதுதான் வேதனையாக உள்ளது. 

 

Morphing photo in watsapp..school girl suicide

 

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகேயுள்ள தேவம்பாளையம் காலனியைச்  சேர்ந்தவர் நந்தகுமார் என்ற 22 வயது  இளைஞர். அருகே உள்ள மற்றொரு காலனியில் 10-ம் வகுப்பு படித்துவரும் மாணவி ஒருவருடன் வாட்ஸ்அப் குருப்பில் நண்பராக இருந்துவந்துள்ளார். மாணவி தனது தோழிகளுடன் எடுக்கப்பட்ட குரூப் போட்டோ ஒன்றினை வாட்ஸ் அப்பில் பகிர்ந்துள்ளார். அந்த போட்டோவில் உள்ள மாணவியின் படத்தை மட்டும் தனியாக எடுத்த நந்தகுமார் அந்த மாணவின் படத்தை  தவறான முறையில் மார்பிங் செய்து அதை அந்த பெண்ணுக்கு அனுப்பி  செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததோடு தனது விருப்பப் படி நடக்க வேண்டும் இல்லையேல் மார்பிங் செய்யப்பட்ட மாணவின் ஆபாச படத்தை இணையதளம் உள்ளிட்ட அனைத்து வாட்ஸ் அப் குரூப்புகளுக்கும் அனுப்பி விடுவேன் என மிரட்டியிருக்கிறான்.

 

 

 

இதனால் மனம் உடைந்த அந்த மாணவி தனது பெற்றோர்களிடம்  இது குறித்து கூறியுள்ளார். பெற்றோர் அந்த இளைஞனின் குடும்பத்திடம் பேசுவோம் என அமைதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அந்த மாணவி எங்கே மார்பிங் செய்யப்பட்ட போட்டோவை வாட்ஸ் அப்பில்  அனுப்பிவிடுவானோ என்றும் இதனால் அவமானம் ஆகிவிடுமே என்கிற அச்சத்தில் இன்று காலை வீட்டிலிருந்த மண் எண்ணெயை தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

 

இதனால் மாணவி பரிதாபமாக இறந்து விட்டார். செல்போன் பயன்பாட்டால் கிராமத்தைச் சேர்ந்த ஒரு அப்பாவி மாணவி தற்கொலை முடிவை நாடியது அப்பகுதி கிராமங்களையே பரிதவிப்பில் ஆழ்த்தியுள்ளது. கொடுமுடி போலீசார் வழக்கு பதிவுசெய்து மாணவியின் போட்டோவை ஆபாசமாக சித்தரித்த நந்தகுமாரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணியாற்றிய பள்ளி மாணவி!

Published on 07/02/2024 | Edited on 07/02/2024
schoolgirl who worked as a conductor in a government bus

கர்நாடக மாநிலம் அப்சல்பூர் கட்டஹாரா கிராமத்தைச் சேர்ந்த வித்யா 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், மாணவி வித்யாவிற்கு பேருந்து நடத்துநராகப் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்து வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா தன்னுடைய நடத்துநர் ஆசை குறித்து போக்குவரத்து பணிமனை அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

மாணவி வித்யாவின் ஆசையைக் கேட்ட அதிகாரிகள் அதனை நிச்சயம் நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளனர். முதலில் மாணவி வித்யாவிற்கு எவ்வாறு பயணச்சீட்டு கொடுக்க வேண்டும் என்று பயிற்சி கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவி வித்யா கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் நடத்துநராகப் பணி செய்ய அனுமதி அளித்தனர். 

பின்னர், அதன்படி அப்சல்பூரில் இருந்து கட்டஹாரா வரை செல்லும் அரசுப் பேருந்தில் மாணவி வித்யா நடத்துநராகப் பணி செய்தார். அவருடன் நடத்துநரும் இருக்கையில், பயணிகளிடம் எங்கு செல்கிறார்கள் என்று கேட்டு, உரிய பயணச்சீட்டை வழங்கினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில் மாணவிக்கும், அவரின் ஆசையை நிறைவேற்றிய போக்குவரத்து அதிகாரிகளுக்கும் இணையவாசிகள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். 

Next Story

விடுமுறைக்கு வந்த சிறுமியை தவறான பாதைக்கு உட்படுத்திய அத்தை; போக்சோவில் நடவடிக்கை எடுத்த போலீஸ்

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
 The aunt who took the vacationing girl astray; Police take action in POCSO

சென்னையில் சிறுமியை மிரட்டி பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை உள்ளிட்ட மூன்று பெண்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கோயம்பேடு பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் செய்த சோதனைகளின் அடிப்படையில் அச்சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதும், சிறுமி கர்ப்பமாக இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மருத்துவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் சம்பந்தப்பட்ட சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கடந்தாண்டு காலாண்டு தேர்வு விடுமுறையில் அத்தை வீட்டிற்கு வந்திருந்த சிறுமியை அத்தை மற்றும் மூன்று பெண்கள் சேர்ந்து பாலியல் தொழிலுக்கு உட்படுத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுமி கர்ப்பம் ஆனது தெரியவந்தது. இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சிறுமியை பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய சிறுமியின் அத்தை மற்றும் மூன்று பெண்களை கோயம்பேடு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.