Skip to main content

ஓடும் பேருந்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; அதிர்ஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்

Published on 23/11/2021 | Edited on 23/11/2021

 

More than 90 passengers on a government bus

 

மயிலாடுதுறையில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அரசு பேருந்தின் பின்பக்க படிக்கட்டு உடைந்தது, அதிர்ஷ்டவசமாக அந்த பேருந்தில் பயணித்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் உயிர்பிழைத்துள்ளனர். மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு 27ஏ என்கிற அரசு பேருந்து செம்பனார்கோவில் ஆக்கூர் வழியாக பொறையார் நோக்கி புறப்பட்டு சென்றது. பேருந்தில் 90 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர். நிற்பதற்குகூட இடமில்லாமல் பேருந்தின் படிக்கட்டுகளில் கல்லூரி மாணவர்கள் தொங்கியபடியே சென்றுள்ளனர்.

 

பேருந்தில் அதிக அளவு கூட்டம் இருந்ததால் பேருந்து மெதுவாக சென்றிருக்கிறது.  தரங்கம்பாடி சாலையில்  சென்றுகொண்டிருந்த போது பேருந்தின் பின்புற படிக்கட்டு திடீரென்று உடைந்து விழுந்தது. படியில் நின்று கொண்டிருந்த மாணவர்கள் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர். படிக்கட்டு உடைந்தது தெரியாமல் டிரைவர் வாகனத்தை ஓட்டிசென்றார். மாணவர்கள் பேருந்தை தட்டி கூச்சலிட்டனர். பிறகு பேருந்து நிறுத்தப்பட்டது. ஆத்திரத்தோடு இறங்கி சென்ற நடத்துனர் நடுரோட்டில் உடைந்து கிடந்த பேருந்தின் படிக்கட்டை எடுத்து பேருந்திற்குள் போட்டுவிட்டு மீண்டும் பேருந்து எடுத்து சென்றனர்.  

 

More than 90 passengers on a government bus

 

இது குறித்து கல்லூரி மாணவர்கள் கூறியதாவது, “அரசு பேருந்துகள் உரிய பராமரிப்பு இல்லாமல் இயக்கப்பட்டு வருவதே இந்த சம்பவம் நடப்பதற்கான காரணம். காலை நேரத்தில் தினந்தோறும் மாணவர்கள் பேருந்தில் போதிய இடவசதியில்லாமல் தொங்கியபடியே ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். பூம்புகார், தரங்கம்பாடி, மணல்மேடு, பந்தநல்லூர் உள்ளிட்ட இடங்களின் மார்க்கமாக செல்லும் பேருந்துகள் அனைத்துமே காலை வேலையில் அதிக கூட்டத்தோடு செல்வதும், மாணவர்கள் கீழே விழுந்து படுகாயமும் அடைவதும் வாடிக்கையாகி விட்டது” என்றனர்

 

பள்ளி, கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு காலை, மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்தை இயக்க வேண்டும். அதை விட முக்கியம் பணிமனைக்கு இரவு நேரங்களில் செல்லும் பேருந்துகளை உரிய முறையில் ஆய்வு செய்து, பராமரிப்பு வேலைகளை செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீர் திடீரென கரையொதுங்கும் மர்மப் பொருட்கள்; அதிர்ச்சியில் மீனவ கிராமம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Mysterious objects that suddenly wash ashore; A fishing village in shock

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடற்கரையில் மர்ம பொருள் ஒன்று ஒதுங்கியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ளது கீழமூவர்க்கரை மீனவ கிராமம். இந்தக் கிராமத்தின் கடற்கரையை ஓட்டி சிவப்பு நிறத்தில் சுமார் 15 அடி உயரம் கொண்ட மர்ம பொருள் ஒன்று கரை ஒதுங்கியது. இதனைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் இது என்னவாக இருக்கும் என்ற அச்சத்தில் பூம்புகார் கடலோர காவல் குழும போலீசாருக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர். இதனையடுத்து உடனடியாக அங்கு வந்த போலீசார் அப்பொருளை ஜேசிபி மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் அந்தப் பொருள் கடலில் 'தடை செய்யப்பட்ட பகுதி' என்பதை உணர்த்துவதற்காக மிதக்க விடும் 'போயம்' என்ற கருவி என்பது தெரியவந்தது.

இதேபோல சில மாதங்களுக்கு முன்பு மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழிக்கு அருகே உள்ள நாயக்கர்குப்பம் மீனவ கிராமத்தில் 'அபாயம் தொட வேண்டாம்' என ஆங்கில எழுத்துக்களில் வாசகங்கள் இடம் பெற்ற உருளை ஒன்று ஒதுங்கியது. அதுவும் அந்த நேரத்தில் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது ஆபத்து நேரங்களில் நீர்மூழ்கி கப்பல்களில் இருந்து வண்ணப் புகையை உமிழ்ந்து சமிக்கைகளை செய்வதற்கு பயன்படுத்தப்படும் சிலிண்டர் என்பது தெரிய வந்தது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

ஊர் ஊராய் 'வி லாக்' காட்டும் சிறுத்தை; திணறும் வனத்துறை

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
A leopard showing 'vlog' from place to place; A forest department that is stifling

கோடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையில் வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. மயிலாடுதுறையில் அண்மையில் தென்பட்ட சிறுத்தையைப் பிடிக்கும் பணியானது கடந்த ஏழு நாட்களுக்கும் மேலாக இன்று வரை தொடர்ந்து வருகிறது.

கடந்த ஒன்பதாம் தேதிக்கு பிறகு மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இல்லாததால் சிறுத்தை இடம்பெயர்ந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து குத்தாலம் அருகே உள்ள காஞ்சிவாய் எனும் கிராமப் பகுதியில் சிறுத்தை சுற்றித் திரிவதாக தகவல்கள் வெளியானது. அந்தப் பகுதியிலும் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று அரியலூர் மாவட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியானது.

இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரி அபிஷேக் தோகர் கூறுகையில், 'கண்காணிப்பு பதிவை மட்டும் வைத்து அரியலூரில் காணப்பட்டது மயிலாடுதுறையில் சுற்றித்திரிந்த அதே சிறுத்தையா என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதனுடைய தெளிவான புகைப்படம் கிடைக்க வேண்டும். இரண்டு சிறுத்தைகளின் புகைப்படம் மற்றும் வேறு சில தடையங்களை ஒப்பிட்டுப் பார்த்துதான் இரண்டும் ஒரே சிறுத்தையா என்பதை உறுதி செய்ய முடியும்'  என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வரை மயிலாடுதுறையில் நான்கு கூண்டுகள் 20க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள் வைக்கப்பட்டு வனத்துறையினர் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். அதேபோல் அரியலூரில் இரண்டு கூண்டுகள் கொண்டு செல்லப்பட்டுள்ளது. சில இடங்களில் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.