Skip to main content

கந்துவட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

S A Ponnusamy



கந்துவட்டிக்காரர்கள் போல் நடந்து கொள்ளும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி ஆளுநருக்கும், மத்திய அரசுக்கும் பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
 


தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் மற்றும் மாநில தலைவரான சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 

கரோனா நோய்த் தொற்றினால் கடந்த மார்ச் மாதம் முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக அனைத்துத் தொழில் நிறுவனங்களும், அரசு, தனியார் அலுவலகங்களும் முற்றிலுமாக மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை அடியோடு முடங்கிப் போனது.

மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதால் பொதுமக்களிடமிருந்து வாகன கடன், வீட்டுக்கடன், வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கடன், தனிநபர் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களுக்கான மாத தவணைத் தொகையை முதலில் மே-31 வரையிலும், அதன் பிறகு ஆகஸ்ட்- 31 வரையிலும் என மொத்தம் ஆறு மாதங்களுக்கு வசூலிக்ககூடாது என ரிசர்வ் வங்கி ஆளுநரும், மத்திய நிதியமைச்சரும் உத்தரவிட்டுள்ள நிலையில் அந்த உத்தரவை மதிக்காமல் குற்றுயுரும், குலையுருமாக இருக்கும் மக்களின் கழுத்தை அறுக்கும் செயலைத் தனியார் வங்கிகளும், தனியார் நிதி நிறுவனங்களும் செய்து வருகின்றன.

 

 

 

rupees


கடந்த மார்ச் மாதத்தில் இருந்து தொழிலாளர்கள் அனைவரும் வேலையிழந்து, வருமானம் இன்றி தவித்து வரும் சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநர், மத்திய நிதியமைச்சர் ஆகியோரின் உத்தரவையும் மீறி தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களின் மாத தவணைகளை கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதும், தன்னிச்சையாகச் செயல்பட்டு மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிராக பொதுமக்களின் வங்கிக் கணக்கில் மிச்சம் மீதி இருக்கும் சொற்ப தொகையை அபராதம் என்கிற பெயரில் சுரண்டுவதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மேலும் கரோனா பேரிடர் காலமான தற்போது பொதுமக்களிடம் பணப்புழக்கம் அறவே இல்லாத சூழலில் அவர்களை மாதத் தவணையைக் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்தக் கூடாது என்கிற மத்திய, மாநில அரசுகளின் உத்தரவிற்கு எதிராகச் செயல்பட்டு வரும் தனியார் வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, அவ்வாறு கட்டாயப்படுத்தும் வங்கிகள், நிதி நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.
 

http://onelink.to/nknapp


கந்து வட்டிக்காரர்கள் போல மனிதாபிமானம் இன்றி நடந்து கொண்டு, மக்களைக் கசக்கிப் பிழியும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் மீது மத்திய, மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கத் தயங்கினால் ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சரும் அறிவித்த அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் கண்கட்டி வித்தைகளாகிவிடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டுகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் அமல்

Published on 24/11/2023 | Edited on 24/11/2023

 

Israel-Hamas issue temporary stop Enforces

 

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே ஒரு மாதத்திற்கும் மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலிருந்து ஆயிரக்கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனிடையே காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

 

தரைவழித் தாக்குதலைத் தீவிரப்படுத்திய இஸ்ரேல் கிட்டத்தட்ட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளை அழித்து உலகத்திலிருந்து காசாவை தனிமைப்படுத்தியுள்ளது. ஹமாஸ் அமைப்பினரை ஒருவர் விடாமல் அழிக்க நினைக்கும் இஸ்ரேலின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பாலஸ்தீன மக்கள் தினந்தோறும் கொல்லப்பட்டு வருகின்றனர். அதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது. இரு தரப்பிற்கும் இடையிலான இந்தப் போரில் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்போரை நிறுத்த உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகின்றன.


இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புடன் தற்காலிக போர் நிறுத்தம் செய்துகொள்ள இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. 46வது நாளாகப் போர் நீடித்து வந்த நிலையில், காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள 50 பெண்கள், குழந்தைகளை விடுவிக்கத் தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருந்தார். 

 

இதனிடையே, இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான 4 நாள் போர் நிறுத்தம் நேற்று (23-11-23) காலை முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் அந்த அறிவிப்பு தள்ளிப்போனது. பிணைக் கைதிகள் மற்றும் பாலஸ்தீன கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தை தொடர்ந்து நடந்து வருவதால் போர் நிறுத்தம் தள்ளிப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. இது குறித்து இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் டாச்சி ஹானெக்பி கூறுகையில், “இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனவே, பிணைக்கைதிகளின் விடுதலை வெள்ளிக்கிழமை (24-11-23) முன்பாக நடைபெறாது. இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பு இடையேயான் ஒப்பந்தத்தின்படி பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்” என்று கூறியிருந்தார். 

 

இந்த நிலையில், இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான தற்காலிக போர் நிறுத்தம் இன்று (24-11-23) முதல் அமலுக்கு வந்துள்ளது. இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தம் 4 நாட்கள் அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

பிரிட்டன் முழுவதும் விமான சேவை முடங்கியது!

Published on 28/08/2023 | Edited on 28/08/2023

 

Flight services across Britain are suspended

 

பிரிட்டன் முழுவதும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான சேவை முடங்கி உள்ளது.

 

பிரிட்டனில் விமான கட்டுப்பாட்டு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நாடு முழுவதும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அருகில் இருந்த விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்கின. அதே சமயம் தொழில்நுட்பக் கோளாறை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக பிரிட்டன் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.