Skip to main content

மாதாந்திர தவணை, வட்டியை கட்ட வற்புறுத்துவதை தடுக்கக்கோரி கலெக்டரிடம் திமுக எம்எல்ஏ மனு!! 

Published on 25/05/2020 | Edited on 25/05/2020
dmk



இராஜபாளையம் தொகுதியில் தனியார் பைனான்ஸ் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற மகளிர் குழுக்களை வட்டிகளையும், மாதாந்திர தவணைகளையும்  உடனடியாக கட்ட வேண்டும் என வலியுறுத்துவதாக இராஜபாளையம் திருவள்ளுவர் தெரு குழு - 1 லிருந்து பொன்களஞ்சியம் என்பவர் எம்.எல்.ஏ. தங்கபாண்டியனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.


இதையடுத்து இராஜபாளையம் நகரில் உள்ள ஆசீர்வாத் மைக்ரோ பைனான்ஸ் லிமிடெட் கிளை நிறுவனத்திற்கு தங்கப்பாண்டியன் நேரில் சென்று மேலாளர் ப்ரித்விராஜிடம், 'வட்டியை செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் ஆணையிட்டுள்ளது. அதன்படி கடன் பெற்ற நபர்களுக்கு வட்டியை செலுத்த 3 மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதுவரையில் பொதுமக்களை வட்டியை செலுத்த வற்புறுத்தக்கூடாது' எனக் கேட்டுக் கொண்டார். அதற்கு மேலாளர், வட்டியை செலுத்த விரும்பும் பொதுமக்கள் மட்டுமே வட்டியை செலுத்தலாம், யாரையும் வற்புறுத்தி வட்டியை வசூல் செய்வதில்லை என உறுதி அளித்தார். 

 

 


மேலும் தங்கபாண்டியன் கூறுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் ஏழை, எளிய பொதுமக்கள் நலன் கருதி வட்டியையும், மாதந்திர தவணைகளையும் செலுத்த மேலும் கூடுதலாக 6 மாத காலம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார். அதன் அடிப்படையில் அதற்கான அறிவிப்பு வரலாம், மேலும் 6 மாதத்திற்கு பிறகு உரிய வட்டிகளை தள்ளுபடி செய்யவும் ஸ்டாலின் கோரிக்கை வைப்பார். தள்ளுபடி செய்யவில்லை எனில் ஸ்டாலின் முதல்வரானதும் வட்டிகளை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். 


 

 

dmk




இராஜபாளையம் தொகுதியில்  தனியார் நிதி நிறுவனம் தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்ற மகளிர் குழுக்களையும் பொதுமக்களையும் வியாபாரிகளையும் தொழிலதிபர்களையும் மாதந்திர தவணைகளையும், வட்டியையும் கட்ட வற்புறுத்துவதை தடுக்கக்கோரி விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து தங்கப்பாண்டியன் மனு அளித்தார். 

 

nakkheeran app




அப்போது, மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும், தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்ற பொதுமக்கள் வட்டியை செலுத்த 6 மாத காலம் அவகாசம் வழங்கியுள்ள நிலையில் பொதுமக்களையும், மகளிர் குழுக்களையும் மாதாந்திர  தவணையும், வட்டியையும் கட்ட  சொல்லி கட்டாயப்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மனவேதனை அடையும் சூழ்நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஆகவே தாங்கள் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்புவதோடு, அவர்களை அழைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் மேல்நிலை கல்விக்கு மட்டும் கல்வி கடன் வழங்குவதுபோல் LKG முதல் 5 ம் வகுப்பு வரை படிக்க வைக்க பெற்றோர்களுக்கு மகளிர் குழுக்கள் மூலம் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அல்லது  கல்வி கட்டணத்தை அரசே ஏற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கு மாவட்ட ஆட்சியர் வட்டியை செலுத்த வற்புறுத்தும் நிதி நிறுவனங்கள் மீது காவல்துறை மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களுடன் ஆலோசனை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், கல்வி கட்டணம் குறித்து தலைமை செயலாளர் அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். மேலும் மாவட்ட கண்காணிப்பாளரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனு குறித்து கூறியபோது, தான் வெளியில் உள்ளதால் உதவியாளரிடம் மனுவை கொடுக்கக்கூறியவர், மனு குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார் என தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.