Skip to main content

தண்ணீர் இன்றி தவிக்கும் குரங்குகள்... தாகத்தை தணிக்கும் காவல்துறை...

Published on 09/05/2019 | Edited on 14/05/2019

கோடைகாலம் ஆரம்பித்து வெயில் சுட்டெரிக்கிறது. மதியம் 12 மணி முதல் 3 மணி வரை வீட்டைவிட்டு வெளியே வராதீர்கள் என வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வெயிலின் தாக்கம் உள்ளது. இந்த வெயிலுக்காக பலரும் இலவச மோர் பந்தல், தண்ணீர் பந்தல் என வைத்து பயணிகளின் தாகத்தை தீர்ப்பது ஒருபுறம்மென்றால், ஒரு டம்ளர் தண்ணீரையும் காசாக்க வேண்டும் என்பவர்களும் மற்றொருபுறம் இருக்கத்தான் செய்கிறார்கள். இதனை காண்பவர்கள் சக மனிதனின் தாகத்தை தணிக்க ஒரு வாய் தண்ணீர் தராத அளவுக்கு மனிதநோயம் மாண்டுவிட்டதே என்ற புலம்பல்கள் பல கேட்கத்தான் செய்கின்றன.
 

 The monkeys without water... police abort the thirst...

 

அதேநேரத்தில் மனித நேயமற்றவர்கள் காவல்துறையை சேர்ந்தவர்கள் என்கிற பொதுவான பிம்பம் மக்களிடம் உள்ளது. பெரும்பாலான நேரங்களில் அப்படி காவல்துறையில் பணியாற்றுபவர்கள் இருந்தாலும், அங்கும் மனித நேயம்மிக்க மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பவர்களும் உண்டு. மனிதர்களிடம் மட்டும்மில்லை, விலங்குகளுக்கே தண்ணீர் தந்து பெரும் பாராட்டை பெற்று வருகிறார்கள் ஒரு காவல்நிலையத்தில்.

 

 The monkeys without water... police abort the thirst...

 

திருவண்ணாமலை மாவட்டத்தில் களம்பூர் என்கிற சிறு பேரூராட்சி உள்ளது. தென்னிந்தியாவில் அரிசிக்கு பெயர் பெற்ற ஊர் இது. இந்த ஊரில் உள்ள காவல்நிலையத்தை சுற்றி மரங்கள் பலவுள்ளன. இந்த மரங்களில் குரங்குகள் பல தினமும் வந்து ஜாலியாக விளையாடிக்கொண்டும் ஓய்வு எடுத்துக்கொண்டும் இருக்கும். தண்ணீர் தாகம் எடுத்தால் பக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் உள்ள கிணற்றின் தொட்டியில் தண்ணீர் அருந்திவிட்டு வரும்.

 

 

தற்போது கோடைக்காலம் நடப்பதால் தண்ணீரில்லாமல் விவசாய நிலங்களும் காய்ந்துப்போய்வுள்ளன. இதனால் குரங்குகள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கின்றன. இதனைப்பார்த்த களம்பூர் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மற்றும் அதிகாரிகள் இணைந்து தினமும் குரங்குகள் குடிக்க இரண்டு முறை பெரிய பிளாஸ்டிக் டப்பாவில் தண்ணீர் நிரப்பிவைக்கின்றனர். தாகம் எடுக்கும்போது குரங்கள் வந்து குடித்து விட்டு செல்கின்றன.
 

 The monkeys without water... police abort the thirst...

 

காவல்நிலையத்துக்கு பிரச்சனையென வந்து காத்திருக்கும் பொதுமக்கள், இதனைப்பார்த்துவிட்டு இதுப்பற்றிய தகவலை வெளியே சொல்லினர். ஆச்சர்யமான பொதுமக்கள், அப்பகுதி சமூக ஆர்வலர்கள். களம்பூர் காவல்நிலைய காவலர்களை வெகுவாக பாராட்டிவருகின்றனர்.

 

காவல்நிலையத்துக்கு வரும் பொதுமக்களிடம் டீ வாங்கி வா, ஜீஸ் வாங்கி வா, ஜெராக்ஸ் எடுத்து வா, பிரியாணி வாங்கி வா என அலையவிடும் காவல் அதிகாரிகளுக்கு மத்தியில் குரங்குகளுக்கு தண்ணீர் தரும் காவலர்கள் பாராட்டுக்குரியவர்களே.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விறு விறு வாக்குப்பதிவு; இளையோர்கள் ஆர்வமாக வருகை!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Youth showing interest in voting in Tiruvannamalai

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 754533 பேரும் பெண் வாக்காளர்கள் 778445 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 121 பேர் என 1553099 நபர்கள் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்தொகுதியில் மொத்தம் 1722 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தொகுதியில் இன்று காலை சரியாக 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. வேட்பாளர்கள் தங்களுக்காக வாக்குபதிவு மையத்துக்கு சென்று தங்களது வாக்குபதிவினை செலுத்தினர்.

திருவண்ணாமலை தொகுதி திமுக வேட்பாளர் அண்ணாதுரை அவரது தேவனாம்பட்டு கிராமத்தில் தனது குடும்பத்தோடு சென்று முதல் வாக்கினை செலுத்தினார். அதிமுக வேட்பாளர் கலியபெருமாள் தென்மாத்தூர் கிராமத்திலும் வாக்கு செலுத்தினர். பாஜக வேட்பாளர் அஸ்வத்தாமனுக்கு அவர் போட்டியிடும் தொகுதியில் ஓட்டு இல்லாததால் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அவரது சொந்த ஊருக்கு சென்று வாக்களித்தாக கூறப்படுகிறது.

ஜனநாயக கடமையாற்ற காலையிலேயே இளையோர்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்துவருகின்றனர்.

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.