குரங்கனி தீ விபத்து- ஈரோட்டைச் சேர்ந்த கண்ணன் உயிரிழப்பு

kannan

தேனி மாவட்டம் குரங்கனி மலையில் மலை ஏற்ற பயிற்சியில் ஈடுபட்டு காட்டுத் தீயில் சிக்கி ஏற்கனவே 12 பேர் இறந்து விட்டனர். இன்று சிகிச்சை பலன் அளிக்காமல் மேலும் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஜே.ஜே.நகரில் வசித்து வரும் கிரி என்பவரது மகன் கண்ணன். B.E. முடித்து ஈரோட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சுற்றுலா அலுவலகம் வைத்து நடத்திய பிரபு என்பவரின் ஏற்பாட்டில் ஈரோட்டிலிருந்து 12 பேர் குரங்கனி சென்றனர். அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை ஈரோடு மாவட்டத்தில் மட்டும் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.

accident fire kannan Monkey rtode
இதையும் படியுங்கள்
Subscribe