Skip to main content

பெண்ணிடம் பண மோசடியில் ஈடுபட்ட இருவர் கைது!

Published on 17/12/2020 | Edited on 17/12/2020

 

money incident in kallakurichi

 

கள்ளக்குறிச்சி  நகரில் தியாகதுருகம் சாலையில் வசிப்பவர் மணி. இவருடைய மனைவி அருட்செல்வி. அருட்செல்வி விழுப்புரம் குற்றப் பிரிவு போலீசில் ஒரு புகார் அளித்துள்ளார்.

 

அந்தப் புகாரில், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவர் கடந்த 2018-ஆம் ஆண்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார். அதே பகுதியில் அவர் வசித்ததால் ஏற்கனவே செந்திலுடன் எனக்கு அறிமுகம் இருந்தது. நட்புரீதியாக எங்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அவர் செந்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த மெடிக்கல் கடை உரிமையாளர் ஜாகீர் என்கிற தீன்பாய் மற்றும் நெல்லை மாவட்டம் பெருமாள்பட்டியைச் சேர்ந்த முருகன் ஆகியோருடன் சேர்ந்து பெரிய அளவில் ராசிக்கல் மற்றும் வைர வியாபாரம் செய்து வருவதாகவும், அதன் மூலம் பல கோடி ரூபாய் பணம் சம்பாதித்து வருவதாகவும் கூறினார்.

 

தற்போது அந்தத் தொழிலில் அதிக அளவில் பணம் முதலீடு செய்து உள்ளதால், தொழிலுக்குத் தற்போது பணத்  தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் உதவி செய்தால், நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு இரட்டிப்பு மடங்கு பணத்தைத் திருப்பித் தருவேன் என்று செந்தில் உறுதி கூறினார். செந்தில் வார்த்தையை நம்பி, நான் ஒரு கோடியே 75 லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்தேன். ஆனால், நாட்கள் சென்றதே தவிர பணத்தை இரட்டிப்பாக்கியும் தரவில்லை, கொடுத்த அசல் பணத்தையும் திருப்பித் தரவில்லை.

 

செந்தில் என்னை ஏமாற்றி வருகிறார். அவர் மீது நம்பிக்கை வைத்துப் பணத்தைக் கொடுத்தேன். எனவே, இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனக்குப் பணம் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அருட்செல்வி தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இவரது புகாரையடுத்து விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் மேற்படி குற்றம்சாட்டப்பட்ட மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்து, ஜாகீர் மற்றும் முருகன் ஆகிய இருவரையும் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். தலைமறைவாக உள்ள செந்திலை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். இளம்பெண்ணிடம் பணத்தை இரட்டிப்பாக்கி தருவதாகக் கூறி கோடிக் கணக்கில், பணத்தை மோசடி செய்த மூவரின் செயல் வெளியுலகத்திற்குத் தெரியவந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடித்துவிட்டு அடிக்கடி தகராறு; தந்தையைக் கொன்ற 15 வயது சிறுவன்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
incident in thoothukudi; police investigation

கன்னியாகுமரியில் பேரனின் மதுப்பழக்கத்தைத் தட்டிக்கேட்ட பாட்டி, தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதேபோல் மது போதையில் தாயை அடித்து துன்புறுத்தி வந்த தந்தையை 15 வயது மகனே கொலை செய்த சம்பவம் தூத்துக்குடியில் மேலும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் செல்சீனி காலனி பகுதியில் வசித்து வருபவர்கள் சக்தி-அனுசியா தம்பதியினர். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். கணவர் சக்தி சமையல் செய்யும் வேலை செய்து வருகிறார்.  குடிப்பழக்கத்திற்கு அடிமையான சக்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவி அனுசியாவை துன்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில்  நேற்று இரவு வணக்கம் போல மது அருந்திவிட்டு வந்த சக்தி, மனைவி அனுசியாவை அடித்து காயப்படுத்தியுள்ளார்.

தந்தையின் இந்தச் செயலால் மன உளைச்சலில் இருந்த மூத்த மகனான 15 வயது சிறுவன், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தந்தை சக்தி மீது சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சக்தி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் சிறுவனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

மனைவி கண்முன்னே பாலியல் வன்கொடுமை; திருமணமான பெண்ணின் பரபரப்பு புகார்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
A married woman's sensational complaint on Incident happened in front of wife

கர்நாடகா மாநிலம், பெலகாவி பகுதியில் உள்ள காவல் நிலையத்தில், 28 வயது திருமணமான பெண் ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரில், ‘ரஃபீக் என்பவர் அவரின் மனைவியின் கண்முன்னே தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மதம் மாற கட்டாயப்படுத்தியதாகவும்’ புகார் அளித்திருந்தார்.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து பெலகாவி போலீசார் தெரிவிக்கையில், ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 2013ஆம் ஆண்டில் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டின் போது, ரஃபீக் என்பவர், அந்த மளிகை கடைக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கும் ரஃபீக்குக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரியவர, தனது மனைவியை கண்டித்துள்ளார். இதில் இவர்களுக்குள் ஏற்பட்ட தகராற்றில் கணவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இதனையடுத்து அந்த பெண், குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவியுடன் ஒரே வீட்டில் தங்க தொடங்கியுள்ளார். ஆனால், அங்கு, குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவிக்கு முன்னால் அந்த பெண்ணை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும், அந்த பெண்ணிடம் குங்குமம் வைப்பதற்கு பதிலாக பர்தா அணியுமாறும், ஒரு நாளைக்கு ஐந்து முறை நமாஸ் செய்யுமாறும் அந்த தம்பதியினர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், அந்த பெண்ணின் கணவரை விவாகரத்து செய்து, இஸ்லாம் மதத்துக்கு மாறி அவர்களுடன் வாழவில்லை என்றால், தனது அந்தரங்க புகைப்படங்களை குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் பரப்பி விடுவதாகவும் ரஃபீக் மிரட்டியுள்ளார்’ எனத் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், இந்திய தண்டனைச் சட்டம் 376, 503, கர்நாடகா மத சுதந்திர உரிமைச் சட்டம் மற்றும் பிற பிரிவுகளின் கீழ் ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ரஃபீக் மற்றும் அவரது மனைவியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.