Skip to main content

கனரா வங்கியில் டெபாசிட் செய்த பணம் இப்படியா காணாமல் போகும்! அதிர்ச்சியில் பொது மக்கள்!

Published on 10/07/2018 | Edited on 10/07/2018

பண மதிபிழப்பு அறிவிப்பின் மூலம் உழைக்கும் வர்க்கத்தை வங்கி வாசலில் காக்கவைத்து உழைத்து சம்பாதித்த காசுக்கே கையேந்தவைத்து வங்கிகளின் மீதான மக்கள் நம்பிக்கை கேள்விக்குறியான நிலையில் தற்போது முசிறி பகுதியில் நடைபெற்ற இந்த செயல் வங்கிகளின் மீதான மக்களின் நம்பிக்கை குலைக்கும் வகையில் இருக்கிறது.
 

முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் உள்ள தேசிய வங்கி கனரா வங்கியின் உள்ள வாடிக்கையாளர்கள் கணக்கில் இருந்து லட்சக்கணக்கில் டெபாசிட் பணத்தை தீடிர் என காணமல் போனதை கண்டித்து வாடிக்கையாளர்கள் வங்கியை முற்றுகையிட்டு சாலைமறியலில் ஈடுபட்டது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா தும்பலம் கிராமத்தில் தேசிய வங்கியின் கிளையான கனரா வங்கி இயங்கி வருகிறது. தும்பலம், சேருகுடி, சூரம்பட்டி, கேணிப்பள்ளம், முத்தம்பட்டி, புதுப்பட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், அரசு ஊழியர்கள், கூலித்தொழிலாளர்கள் இந்த வங்கியில் கணக்கு உள்ளது. அண்மை காலமாகவே வாடிக்கையாளர்களின் கணக்கு இருப்பில் உள்ள பணம் அவ்வப்போது காணாமல் போவது குறித்து புகார் எழுந்த வண்ணம் இருந்தது இதுகுறித்து வங்கி நிர்வாகத்திடம் கேட்கும்போது முறையான பதில் சொல்லாமல் சமாளித்து வந்தனர். இந்நிலையில் தும்பலத்தை சேர்ந்த சித்ரா என்பவர் கணக்கிலிருந்து ரூ.2 லட்சத்து 35 ஆயிரமும், மணி என்பவர் கணக்கிலிருந்து ரூ.90 ஆயிரமும், சூரம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் கணக்கில் ரூ.3 லட்சத்து 25 ஆயிரமும், சண்முகம் என்பவர் கணக்கில் ரூ.50 ஆயிரமும், சிட்டிலரை சரவணன் கணக்கிலிருந்து 95 ஆயிரம் ரூபாயும், அரவன் என்பவர் கணக்கில் ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் என வாடிக்கையாளர்களுக்கு தெரியாமல் பணம் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதற்கான SMS வாடிக்கையாளர்களின் செல்போன்களுக்கு செல்வது தடுக்கப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் தற்செயலாக வாடிக்கையாளர்கள் தங்களது வங்கி கணக்கு புத்தகத்தை என்ட்ரி செய்து பார்த்தபோது லட்சக்கணக்கில் பணம் குறைந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் வங்கி மேலாளரிடம் கேட்டபோது அங்கிருந்த தற்காலிக ஊழியர் கருணாநிதி என்பவர் வாடிக்கையாளர்களை மிரட்டி விரட்டியிருக்கிறார். இதுகுறித்து தும்பலம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பத்திரிகையாளர்களிடம் தும்பலம் வங்கியில் பணிபுரியும் தற்காலிக ஊழியர் கருணாநிதி என்பவர் வங்கியின் கம்ப்யூட்டரிலிருந்து வாடிக்கையாளர்களின் கணக்கிலிருந்து லட்சக்கணக்கான பணத்தை அவரது கணக்கிற்கு மாற்றி எடுத்துள்ளார். இதுபோல பலரின் வங்கி கணக்கிலிருந்து பணம் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இழந்துள்ள தொகை சுமார் ரூ.50 லட்சத்தை தாண்டும் என தெரிகிறது. 
 

எனவே வங்கியின் உயர் அலுவலர்கள் விசாரணை நடத்த வேண்டும் என்றார். இந்நிலையில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் உள்பட சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கியை முற்றுகையிட்டனர். அப்போது அங்கிருந்த வங்கி அலுவலர்களின் பதில் திருப்தியளிக்காததால் வங்கியின் எதிரே முசிறி - தா.பேட்டை ரோட்டில் சாலை மறியல் செய்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முசிறி எஸ்.ஐ. ராம்குமார் மற்றும் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. பின்னர் மீண்டும் வங்கியை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்த அலுவலர்களிடம் தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க வேண்டும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாடிக்கையாளர்கள் முறையாக புகார் அளித்தால் உரிய தீர்வு காணப்படும் எனக் கூறினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
 

கருணாநிதி என்பவர் பழைய வங்கி மேலாளர் சிவா என்பவரால் இந்த வங்கிக்குள் கொண்டுவரப்பட்டவர். அவருக்கு எடுபிடியாக இருந்தவர் அவருடன் இணைந்து தான் இது போன்ற காரியங்களில் ஈடுபட்டுயிருக்கிறார். வங்கி மேலாளாருக்கு எடுபிடியாகவும், இருக்கும் தற்காலிக ஊழியர் ஒருவர் எப்படி வங்கியின் கம்யூட்டரின் ரகசிய குறீயிட்டு எண்களை தெரிந்து கொண்டு பயன்படுத்த முடியும். இதற்கு பிண்ணனியில் வங்கியின் உயர் அதிகாரிகள் இருக்கலாம் என்று அந்த கிராம மக்கள் குற்றசாட்டுகிறார். சரியான முறையில் வங்கியின் சார்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வங்கிகளின் மீதாக இருக்கும் கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் கனரா வங்கி இழக்கும் வாய்ப்பு உள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

பூச்சிக்கொல்லி மருந்தா? பயிர்க்கொல்லி மருந்தா? - போராடும் விவசாயிகள்! நடவடிக்கை எடுக்கத் தயங்கும் அதிகாரிகள்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Farmers struggle at Pudukkottai District Collectorate

திருச்சி மாவட்டம் மணப்பாறை வட்டம் சேர்பட்டி அருகே மறவனூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி செந்தில்குமார் 10 ஏக்கரில் நெல் பயிர் நடவு செய்துள்ளார். கதிர் வரும் நிலையில் இலைசுருட்டுப்புழு காணப்பட்டதால் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள ஒரு தனியார் பூச்சிக்கொல்லி மருந்துக் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கிச் சென்று 8.5 ஏக்கருக்கு தெளித்துள்ளார்.

பூச்சிக்கொல்லி மருந்து தெளித்து சில நாட்களில் பயிர்கள் கருகத் தொடங்கி ஒரு வாரத்தில் முழுமையாக கருகியது. சம்பந்தப்பட்ட மருந்துக் கடையில் கேட்டதற்கு சரியான பதில் இல்லாததால் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டார் விவசாயி செந்தில்குமார். இதனையடுத்து வயலுக்கே வந்து ஆய்வு செய்த வேளாண்துறை அதிகாரிகள் பூச்சிக்கொல்லி மருந்தால் தான் பயிர்கள் கருகிவிட்டதாக சான்றளித்தனர்.

இதனையடுத்து விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக்கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், வியாழக்கிழமை தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் துணைச் செயலாளர் சேகர் முன்னிலையில் ஏராளமான விவசாயிகள் கருகிய பயிர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி வந்தனர்.

கருகிய பயிர்களுடன் வந்த விவசாயிகளை ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்காததால் நுழைவாயிலிலேயே கருகிய பயிர்களை கொட்டியும் கையில் வைத்துக் கொண்டும் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அங்கு வந்த போலீசாரும் வருவாய்த் துறை அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய பிறகு ஆட்சியர் அலுவலக நுழைவாயில் போராட்டத்தை விவசாயிகள் முடித்துக் கொண்டனர்.

ஆனால் வேளாண்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் பிச்சத்தான்பட்டியில் திருச்சி மாவட்ட விவசாயிகள் இருவர் செல்போன் கோபுரத்தில் ஏறிவிட்டனர். அதேபோல மற்றொரு குழு விவசாயிகள் விராலிமலை வேளாண் இணை இயக்குநர் அலுவலகத்திற்குச் சென்ற விவசாயிகள் அலுவலகத்திற்குள் நுழைந்து நடவடிக்கை எடுக்கும் வரை போகமாட்டோம்  என்று அங்கேயே படுத்துவிட்டனர்.

அதன் பிறகே சம்பந்தப்பட்ட விராலிமலை பூச்சிக்கொல்லி மருந்துக் கடையை அதிகாரிகள் மூடினர். பூச்சிக்கொல்லி மருந்து கேட்டால் பயிர்க்கொல்லி மருந்து கொடுத்து 8.5 ஏக்கர் நெல் பயிர்களைக் கொன்ற பூச்சி மருந்துக்கடை உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். கடையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கீரமங்கலத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை புதிய லேபிள் ஒட்டி புதிய மருந்தாக விற்பனைக்கு வைத்திருந்த சுமார் 1500 மருந்துப் பாட்டில்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் இப்போது நடவடிக்கை எடுக்க தயக்கம் ஏன் என்ற கேள்வி எழுப்புகின்றனர்.

Next Story

எங்களுக்கு மாநகராட்சி வேண்டாம்! 100 நாள் வேலை தான் வேண்டும்! - போராட்டத்தில் மக்கள்!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Pudukottai people are protesting that we don't want a corporation

கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுக்கோட்டையைச் சுற்றியுள்ள 11 ஊராட்சிகளை இணைத்து புதுக்கோட்டை நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்துவதாகத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். இந்த அறிவிப்பு வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே ‘வேண்டாம் மாநகராட்சி’ என்ற பெயரில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களை இணைத்து போராட்டக்குழு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், முதலமைச்சரின் அறிவிப்பையடுத்து போராட்டம் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருக்கட்டளை, திருமலைராயசமுத்திரம் கிராம மக்கள் ஒன்று கூடி திங்கள் கிழமை, வேண்டாம் மாநகராட்சி என்று முழக்கமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சியில் இருக்கும் எங்களுக்கு 100 நாள்  வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை கிடைக்கிறது. இதுமட்டுமின்றி பல்வேறு சலுகைகளும் கிடைக்கிறது. மேலும் சொத்துவரி, குடிநீர் வரி உள்பட பல்வேறு வரிகள் உயர்த்திக் கட்ட வேண்டும். குப்பை வரி வாங்குவாங்க ஆனா குப்பை அள்ளமாட்டாங்க. வேலையே இல்லாம இந்த வரியெல்லாம் எப்படி கட்ட முடியும். அதனால் வேண்டாம் மாநகராட்சி என்று கோரிக்கை முழக்கமிட்டனர்.

அதே நேரத்தில் மாநகராட்சியில் 100 நாள் வேலை கிடைக்காது. ஆனால் எங்களை சம்மதிக்க வைக்க வேலை தருவதாக சொல்வாங்க. அப்புறம் தரமாட்டாங்க என்கின்றனர் போராட்டத்தில் இருந்த பெண்கள். இது முதற்கட்ட போராட்டம் தான். தேர்தலுக்கு முன்பே இன்னும் பலகட்ட போராட்டங்களை 11 ஊராட்சி மக்களும் ஒன்று சேர்ந்து எடுப்பார்கள். இல்லை என்றால் தேர்தலை புறக்கணித்து ஆளும் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்கவும் திட்டமிட்டுள்ளனர் என்கின்றனர்.