Skip to main content

மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் விவரங்கள்! 

Published on 13/06/2022 | Edited on 13/06/2022

 

Modified IAS officers Details

 

தமிழகத்தில் உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள் உள்ளிட்ட பல ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, வணிக வரித்துறை கமிஷனராக இருந்த பணீந்திர ரெட்டி- உள்துறை செயலாளர். உள்துறை செயலாளராக இருந்த எஸ்.கே.பிரபாகர் - வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளர் நசீமுதீன்- தொழிலாளர் நலன் மற்றும் தனித்திறன் மேம்பாடு துறை செயலாளர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் - கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர்.

 

சென்னை மெட்ரோ ரயில் வாரிய மேலான் இயக்குநர் மற்றும் முதன்மை செயலாளர் இயக்குநர் பிரதீப் யாதவ் - நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர். நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளர் தீரஜ் குமார் - வணிகவரித்துறை கமிஷனர்/முதன்மை செயலாளர். சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையில், சிறப்பு அதிகாரி/ முதன்மை செயலாளராக பணியாற்றிய செந்தில்குமார் - தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர்.

 

தமிழக விளையாட்டு ஆணைய முன்னாள் உறுப்பினர் செயலாளர் ஆனந்தகுமார் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர். தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநர் தாரேஷ் அகமது - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கமிஷனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை கமிஷனர் ஜெயகாந்தன் - புவியியல் மற்றும் கனிம வளத்துறை கமிஷனர். புவியியல் மற்றும் கனிம வளத்துறை இயக்குநர் நிர்மல் ராஜ் - போக்குவரத்து துறை கமிஷனர். வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுகுடியமர்த்தல் துறை செயலாளர் ஜெசிந்தா லசாரஸ் - மாற்றுத்திறனாளிகள் நலத்துறை கமிஷனர்.

 

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர ராஜ் - வணிகவரித்துறை இணை கமிஷனர். தமிழக சிவில் சப்ளை கார்பரேசன் இணை மேலாண் இயக்குநர் சங்கீதா - வணிக வரித்துறை நிர்வாக கூடுதல் கமிஷனர். திருச்சி ஆட்சியர் சிவராசு - கோவை, வணிகவரித்துறை இணை கமிஷனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர்த்துறை கமிஷனர் மதிவாணன் - மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கமிஷனர். மரியம் பல்லவி பல்தேவ் - தொழிற்சாலைகள் துறை கூடுதல் செயலாளர். மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர் விஜயேந்திர பாண்டியன் - கருவூலம் மற்றும் அக்கவுண்ட் துறை கமிஷனர்.

 

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் லாவ்லீனா- உணவுபாதுகாப்பு துறை கமிஷனர். ராமநாதபுரம் முன்னாள் கலெக்டர் சந்திரகலா - தொழில் முதலீடு கழக இயக்குநர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத்துறை இணை செயலர் ஜான் லூயிஸ் - வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை கமிஷனர். அருங்காட்சியக துறை இயக்குநர் ராமன் - வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரக அலுவலகத்தில் பேரிடர் மேலாண்மை இயக்குநர். தட்கோ மேலாண் இயக்குநர் விவேகானந்தன் - மாநில தேர்தல் ஆணைய செயலாளர். சென்னை முன்னாள் ஆட்சியர் விஜயராணி - சேலம் பட்டுநூல் வளர்ப்பு கழக இயக்குநர். பால் உற்பத்தி மற்றும் பால் வளர்ச்சி கழக கமிஷனர் பிரகாஷ் - வரலாறு மற்றும் காப்பகங்கள் கமிஷனர்.

 

ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர் பிங்கி ஜோயல் - பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர். பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை கமிஷனர் கருணாகரன் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை சிறப்பு செயலாளர். கருவூலத்துறை கமிஷனர் வெங்கடேஷ் - போக்குவரத்து துறை சிறப்பு செயலாளர். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை இணை கமிஷனர் சீதா லெட்சுமி - சமூக நலன் மற்றும் பெண்கள் முன்னேற்றத்துறை இணை செயலாளர். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநர் பிரவீன் நாயர் - மின்னணு நிர்வாகத்துறை இயக்குநர். தமிழக பாட புத்தகம் மற்றும் கல்வி சேவை கழக மேலாண் இயக்குநர் மணிகண்டன் - பள்ளிகல்வித்துறை இணை செயலாளர்.

 

வரலாறு மற்றும் காப்பகங்கள் துறை முதன்மை கமிஷனர் ஹர்சகாய் மீனா - திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை சிறப்பு செலயாளர். சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை துணை கமிஷனர் நரனவாரே மணிஷ் ஷங்கர்ராவ் - ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் கூடுதல் இயக்குநர். தமிழக குடிநர் சப்ளை மற்றும் கழிவுநீர்வாரிய இணை மேலாண் இயக்குநர் பிரதீப்குமார் - திருச்சி ஆட்சியர். சேலம், பட்டுநூல் வளர்ச்சித்துறை இயக்குநர் சாந்தி - தர்மபுரி ஆட்சியர். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநர் ஜானி டாம் வர்கீஸ் - ராமநாதபுரம் ஆட்சியர். வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணைய கமிஷனர் சித்திக் - சென்னை மெட்ரோ ரயில் கழக முதன்மை செயலாளர் மற்றும் மேலாண் இயக்குநர். சென்னை மெட்ரோபோலிட்டன் குடிநீர் சப்ளை மற்றும் கழிவுநீர் வாரிய முன்னாள் நிர்வாக இயக்குநர் ஆகாஷ் - தென்காசி ஆட்சியர் என இடமாறுதலும், பணிமாறுதலும் நடந்துள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்; தமிழக அரசு உத்தரவு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
Tamil Nadu Govt order Transfer of 8 IAS officers

சமீப காலமாகப் பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்படுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில், அண்மையில் தமிழ்நாடு முழுவதும் 6 மாவட்ட ஆட்சியர் உள்பட 14 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், தற்போது 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ‘மாநில மனித உரிமைகள் ஆணைய செயலாளராக ஏ. சுகந்தி ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மற்றும் உள்துறை இணைச் செயலாளராக எஸ்.பி. அம்ரித் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், வணிகவரித்துறை இணை ஆணையராக (நிர்வாகம்) பி. ரத்தினசாமி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று இணை மேலாண் இயக்குநராக ஆனந்த் மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக நிஷாந்த் கிருஷ்ணா ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி மாநகராட்சி ஆணையராக வி. சரவணன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை பெருநகர மாநகராட்சி கூடுதல் ஆணையராக (சுகாதாரம்) வி. ஜெயச்சந்திர பானு ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். ராமநாதபுரம் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் திட்ட அதிகாரியாக வீர்பிரதாப் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
IAS officers job transfer!

தமிழ்நாட்டில் 12 ஐஏஎஸ் அதிகாரிகள்  பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

இது குறித்து தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், ‘திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த முருகேஷ் வேளாண்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக இருந்த ரவிச்சந்திரன் உயர்க்கல்வித்துறை துணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். விவசாய சந்தைப்படுத்தல் மற்றும் விவசாய வணிக இயக்குநராக பொறுப்பு வகித்து வந்த நடராஜன் ஐஏஎஸ், வருவாய் நிர்வாகத்துறை கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வருவாய் நிர்வாக முதன்மைச் செயலராக இருந்த பிரகாஷ் ஐஏஎஸ், வேளாண் வணிகத்துறை முதன்மைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதே போல், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குநராக ஐஏஎஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த குமரவேல் பாண்டியன், தோட்டக்கலைத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

மேலும், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்ட ஆட்சியராக சுப்புலட்சுமியை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக அருண்ராஜ் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், சேலம் மாவட்ட ஆட்சியராக பிருந்தா தேவியை பணியிட மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக கற்பகராஜ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக கமல்கிஷோரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.