Skip to main content

“ஜனநாயகத்தை சிதைக்கும் பணியில் மோடி அரசு செயல்படுகிறது” - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

nn


சிதம்பரம் வடக்கு வீதி கஞ்சி தொட்டி முனையில் முன்னாள் கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பி.பி.கலியபெருமாள் 4 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன் அனைவரையும் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டு பி.பி.கலியபெருமாள் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

 

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, ''இன்றைக்கு நாடாளுமன்றம் நடைபெறாமல் இருப்பதற்கு மோடி தான் காரணம். ஏனென்றால் அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை. சர்வாதிகாரிகள் இரண்டு வகை.  இராணுவ ரீதியாக ஒரு சர்வாதிகாரம் உண்டு. அதன்  மூலம் ஆட்சியை கைப்பற்றுவார்கள். தேர்தல் மூலம் வந்து சர்வாதிகாரிகளாக மாறி ஆட்சியை கைப்பற்றுவார்கள். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு பொதுவான வரவு செலவுத் திட்டமும், வேளாண்மைக்கு என தனி வரவு செலவுத் திட்டமும் மிகச் சிறப்பாக நிறைவேற்றி உள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் ஆடம்பரம் இல்லாமல் வெற்று அறிவிப்புகள் இல்லாமல் வளர்ச்சியை நோக்கி இந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கட்டுப்படுத்தி உள்ளார். இந்தியாவில் செய்ய முடியாத விஷயங்களில் ஒன்று நிதி பற்றாக்குறையை கட்டுப்படுத்துவது தான். அவரை பாராட்ட நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

 

தமிழக முதல்வர் வேளாண்மையில் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார். அதனை வளர்க்க வேண்டும் என விரும்புகிறார் என்பதை எடுத்துக்காட்டாக இந்த பட்ஜெட் சிறந்த முறையில் உள்ளது. உதாரணமாக கொள்முதல் விலையை ஓரளவு அதிகப்படுத்தி உள்ளது வரவேற்கத்தக்க விஷயம். நெல் சன்ன ரகத்திற்கும் மோட்டார் ரகத்திற்கும் கணிசமான முறையில் உயர்வு தந்துள்ளார்கள். அதனை நாங்கள் வரவேற்கிறோம். புதிய விவசாய மின் இணைப்புகளை அறிவித்துள்ளார்கள். நீண்ட காலமாக புதிய மின் இணைப்பு கிடைப்பதில்லை. ஆனால் தற்போது விவசாயிகளுக்கு புதிய மின் இணைப்பு கொடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனையும் தமிழக காங்கிரஸ் வரவேற்கிறது.

 

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றனர். நாடாளுமன்ற வரலாற்றிலேயே காந்தி சிலை முன்பு தான் ஆர்ப்பாட்டம் நடைபெறும். ஆனால் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள முதல் மாடியில் ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். ஏனென்றால் தங்களின் எதிர்ப்பை உரக்கச் சொல்ல வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்'' என்றார்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.

Next Story

“தேர்தலை புறக்கணியுங்கள்..” - மக்களுக்கு பகிரங்க மிரட்டல்; கேரளாவில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 threat to public to boycott election in Wayanad

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம்  இன்று (24-04-24) மாலையுடன் நிறைவு பெறுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயநாடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கம்பமலை கிராமத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் 4 பேர் பொதுமக்களிடையே தேர்தலை புறக்கணியுங்கள் என்று எச்சரித்துள்ளனர். மேலும் அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பி அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார்.

வயநாடு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் ஆனி ராஜவும் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் மாவோயிஸ்டுகள் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.