Skip to main content

மோடி, சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சி.... பாதிப்பின்றி பேனர் வைக்க அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் மோடி சந்திப்பு நிகழ்ச்சியில் வரவேற்பு பேனர்கள் வைக்க நீதிமன்றத்தின் அனுமதியை தமிழக அரசு கோரியிருந்த நிலையில் மக்களுக்கு பாதிப்பின்றி வரவேற்பு பேனர்கள் வைக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Modi, Chinese Chancellor Meeting .... Court instructs Government to put banner


விதிமீறி பேனர்கள் வைக்க கூடாது என்று ட்ராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில் அரசியல் கட்சிகள் விதிகளை மீறி பேனர்கள் வைக்க கூடாது என்றும், அரசியல் கட்சிகள் விதி மீறி பேனர்கள் வைக்கமாட்டோம் என்ற உத்திரவாதத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்றும் கடந்த டிசம்பர் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.   

இந்நிலையில் தனியார் ஐ.டி பெண் ஊழியர் சுபஸ்ரீ பேனர் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து. அது தொடர்பான வழக்கிலும் பேனர் கலாச்சாரத்திற்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் வரும் 11ஆம்  தேதி மாமல்லபுரத்தில் இந்தியா, சீனத் தலைவர்கள் இருவரின் சந்திப்பு நடைபெறவிருக்கின்ற நிலையில் சென்னை விமானநிலையம் முதல் மாமல்லபுரம் வரை 16 பேனர்கள் வைக்க நீதிமன்றத்தில் தமிழக அரசு அனுமதி கோரியிருந்தது.  

 

hh

 

இந்த வழக்கின் விசாரணையில் திமுக மற்றும் ட்ராபிக் ராமசாமி தரப்பில் கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இந்த சந்திப்பு நிகழ்ச்சியை வரவேற்கிறோம் ஆனால் பேனர் வைத்துதான் வரவேற்க வேண்டுமா பாரம்பரிய முறைப்படி வரவேற்கலாமே என வாதிடப்பட்டது. 

விதியை மீறி பேனர் வைக்கக்கூடாது என கூறியது அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே என வாதடிய தமிழக அரசு, அரசு சார்பில்தான் பேனர் வைக்கப்படுகிறது அரசியல் கட்சிகள் பேனர் வைக்க அனுமதிக்கமாட்டோம் என உறுதியளித்தது.

இதனையடுத்து  பேனர் வைக்க அனுமதி கோரி அரசு நீதிமன்றத்தில் மனுவை முன்வைக்கவில்லை டிசம்பர் மாதம் கேட்கப்பட்டிருந்த உத்திரவாதத்தின் அடிப்படையில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 16 பேனர்களை வைக்க இருப்பதாக அந்த மனுவில் நீதிமன்றத்திற்கு தகவலாக அரசு தெரிவித்திருப்பதாகவும் கூறிய நீதிபதிகள், பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, இடையூறின்றி பலமான கட்டமைப்புகளுடன்  வரவேற்பு பேனர்கள் வைக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தல் செய்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.