கோரோனாவின் ஆபத்தை உணர்ந்து வீடுகளில் சிலர் தனிமைப் படுத்திக்கொண்டு பாதுகாப்பாக உள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாமல் முரட்டுமனிதர்கள், வரும் ஆபத்தை உணராமல் கட்டுப்பாடுகளை மீறி, போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் சுற்றித் திரிகிறார்கள்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த ஆங்கில மருத்துவத்தில் இதுவரை மருந்து கண்டு பிடிக்கப்படவில்லை.பல மாடிக்கட்டிடங்கள் கொண்ட ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள்,மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இப்படிப்பட்டவர்கள் உலக அளவில் இருந்தும் தற்போதைய கொரோனா உட்பட 50 நோய்களுக்கு ஆங்கில மருத்துவத்தில் மருந்துகள் இல்லை என்கிறார்கள்.
மக்களை மிரட்டும் கொரோனா அயல்நாடுகளில் இருந்து வந்தவர்கள் மூலமே நம் நாட்டு மக்களுக்கு பரவி வருகிறது. சீனாவில் இந்நோயின் தாக்கம் பிப்ரவரி முதல் தீவிரமாக பரவியது. இந்தியா மட்டும் கடந்த 15ஆம் தேதி தடுப்பு நடவடிக்கைகளில் இறங்கியது. சீனாவில் பரவிய பிப்ரவரி மாத காலகட்டத்திலேயே நமது இந்தியாவிலும் அயல் நாடுகளில் இருந்து விமானம் மூலம் வந்தவர்களை மருத்துவமணைகளுக்கு கொண்டு சென்று அப்போதே தனிமைப் படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் ஆரம்பத்திலேயே தடுத்திருக்கலாம்.
விமானத்தில் வந்தவர்களைப் பெயரளவிற்கு பரிசோதனை செய்து அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள் அப்படிபட்டவர்களில் கொரோனா தொற்று இருந்து அது தீவிரமாகி அவர்களுடன் இருந்த மற்றவர்களுக்கும் பரவிவருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. பொதுவாக டெங்கு, மலேரியா, பறவைகாய்ச்சல், பன்றிகாய்ச்சல், சிக்கன்குனியா போன்ற நோய்களில் இருந்து மக்களைக் காப்பாற்ற பெரிதும் உதவியது சித்தமருத்துவத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நிலவேம்பு கசாயம்.
அதேபோல் இப்போதும் சித்தமருத்துவ நிபுனர்கள் கபசுரநீர், வாதசுரநீர் ஆகிய இரண்டு மருந்துகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் எனக் கூறிவருகிறார்கள். இதை பயன்படுத்த முதலில் அரசுகள் தயக்கம் காட்டியது. இப்போது பிரதமர் மோடி, சித்தமருத்துவ ஆய்வாளர்கள் கருத்தைக் கேட்டு இதைப் பயன்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை மக்கள் பயன்பாட்டுக்கு ஒரே நேரத்தில் தயாரித்துக்கொடுப்பதில் நடைமுறைசிக்கல்கள் இருக்கின்றன.
மத்திய, மாநில அரசுகள் போர்கால அடிப்படையில் இதற்கான மூலப்பொருட்களைத் திரட்டி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாம்கால் மருந்துகம்பெனிகள் மூலம் தயாரித்து வழங்கினால் விரைவில் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் என்கிறார்கள் சித்தமருத்துவர்கள்.
அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்தமருத்துவமனை பிரிவுகளில் இருந்து மக்களுக்கு நிலவேம்பு கசாயத்தைத் தற்போதைக்கு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளதாம். இன்நோயில் இருந்து மக்களைப் பாதுகாக்க தனிமைப்படுத்துவது மிகமிக அவசியம். அதே நேரத்தில் மக்கள் தனிமைபடுத்தப்பட்டுள்ள இந்த நேரத்தில் அதற்கான மாற்று மருந்து கண்டுபிடிப்பது அல்லது மாற்றுவழி கண்டறிவது மிகமிக அவசியம் என்பதை மத்தியமாநில அரசுகள் உணரவேண்டும்.
மக்கள் கிராமங்களில் அவர்களே முன்வந்து மாட்டுச் சாணம், மஞ்சள், வேப்பிலை, வசம்பு, போன்ற கிருமி நாசினிகளைக் கரைத்து தெருக்களிலும் வீடுகளிலும் தெளித்துவருகிறார்கள். இதன் மூலம் கிருமிகள் பரவுவதைத் தடுக்க முடியும் அதேநேரத்தில் தனிமனிதர்களும் தங்கள் உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒருவருக்கொருவர் நோய்த்தொற்று இருக்கிறதோ இல்லையோ விலகி இருக்கவேண்டும். கும்பல் கூடுவதைத் தவிர்க்க வேண்டும். முன்னெச்சரிக்கையாக உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாக்கும் உணவுகளைச் சாப்பிட வேண்டும். வெண்ணீர், எலுமிச்சை சாறு, இஞ்சி, கலந்து சாறு குடிக்கலாம். இப்படி முன்னெச்சரிக்கையாக இருப்பதன் மூலம் நோய் வராமல் பாதுகாத்துகொள்ள வேண்டும் என்கிறார் நெய்வேலி மந்தாரகுப்பத்தைச் சேர்ந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவ மாணவர் அரிபாரதி.
மக்கள் ஒவ்வொருவரும் உயிர் பயத்தில் உள்ளனர் என்பதற்கு இதோ ஒரு உதாரணம். விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகில் உள்ளது சிறுணாம்பூண்டி கிராமம். இந்த ஊரில் நேற்று ஆதரவற்ற மனிதர் ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்துபோய்விட்டார் இவரது உடலை எடுத்து அடக்கம் செய்ய கூட ஊர் மக்கள் முன்வரவில்லை. இதையடுத்து அனந்தபுரம் காவல்நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்கள் சென்று அந்த உடலை அடக்கம் செய்துள்ளனர். இதே நிலைதான் மற்றக்குடும்பங்களிலும் நடந்தாலும் கண்டுகொள்ளமாட்டார்கள் காரணம் கொரோனா நோயில் இறந்திருக்கலாம் நாம் அருகில் சென்றால் நமக்கு அந்த நோய்த் தொற்றிவிடும் என்ற பயத்தில் மக்கள் விலகியிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட நிலை ஏற்படாமல் மத்திய மாநில அரசுகள் கொரோனா நோய் பரவலில் இருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டும். மக்களும் இந்த நோயினால் மற்றநாடுகளில் நடக்கம் சம்பவங்களை ஊடகங்கள் மூலம் பார்த்தது வருகிறார்கள். அதை உணர்ந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்தி பாதுகாத்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.
சித்த மருத்துவ ஆய்வாளர்களின் கருத்தை ஏற்றுக்கொண்டாரா மோடி?
சார்ந்த செய்திகள்
Next Story
“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.
அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.
70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.
2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.
Next Story
“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.
அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.
இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.
திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.