Skip to main content

தமிழகம் முழுவதும் நடமாடும் காய்கறி திட்டம்! -உள்ளாட்சித்துறை அதிரடி ! 

Published on 04/04/2020 | Edited on 04/04/2020

கோவை மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் வீதி வீதியாக செல்லும், நடமாடும் காய்கறி வண்டிகள் சேவை திட்டத்தை தொடங்கி வைத்திருக்கிறார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. 

கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. 144 தடை காலத்தில் வெளியே வந்து காய்கறிகள் வாங்கிச் செல்வது சிரமமாக இருப்பதால், காய்கறிகள் வாங்க மாநகராட்சி சிறப்பு ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனை நிறைவேற்றி வைத்த அமைச்சர் வேலுமணி, "நடமாடும் காய்கறிகள் வண்டிகள் சேவை தொய்வின்றி செயல்பட வேண்டும்" என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.  
 

100 வார்டுகளை உள்ளடக்கிய கோவை மாநகராட்சியில், 20 வார்டுகளுக்கு ஒரு மண்டலம் என்ற அடிப்படையில் 5 மண்டலங்கள் இயங்குகின்றன. ஒரு மண்டலத்துக்கு 5 நடமாடும் காய்கறி வண்டிகள் இயக்கப்படும் என்றும், மொத்தம் 25 நடமாடும் காய்கறி வண்டிகள் 5 மண்டலங்களிலும் இயக்கப்படும் என்றும் கோவை மாநகராட்சி அறிவித்து செயல்படுத்து வருகிறது.

 

 Vegetable


 

18 வகையிலான காய்கறிகள் அடங்கிய ஒரு தொகுப்பின் விலை, 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், நாட்டுத் தக்காளி ஒரு கிலோ, பெரிய வெங்காயம் ஒரு கிலோ, பச்சை மிளகாய் கால் கிலோ, ஒரு தேங்காய், 2 எலுமிச்சை, கத்தரிக்காய் கால் கிலோ, வெண்டைக்காய் கால் கிலோ, புடலங்காய் அரைகிலோ, பீர்க்கங்காய் அரைகிலோ, முருங்கைக்காய் கால் கிலோ, உருளை அரை கிலோ, கேரட் கால் கிலோ, முள்ளங்கி அரை கிலோ, பீட்ரூட் கால் கிலோ, கீரை ஒரு கட்டு, கறிவேப்பிலை ஒரு கட்டு, கொத்தமல்லி ஒரு கட்டு, புதினா ஒரு கட்டு என  ஒரு தொகுப்பாக வழங்கி வருகிறது கோவை மாநகராட்சி. 
 

"உள்ளாட்சித் துறையில் வழங்கப்படும் நடமாடும் காய்கறிகள் திட்டம் கோவை மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து மாநகராட்சிகளிலும் இதை அமல்படுத்த முடிவு செய்துள்ளார் அமைச்சர் வேலுமணி. அதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார் " என்கிறார்கள் உள்ளாட்சித்துறை அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.