Skip to main content

செல்ஃபோன் இணைப்பு சரிவர கிடைக்காததால் அல்லாடும் வடலூர் சுற்று வட்டார மக்கள்! 

Published on 30/04/2019 | Edited on 30/04/2019

கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூர், மாவட்டத்தின் மையப்பகுதியிலுள்ள ஊர். வள்ளலாரின் அருட்சபை உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரக்கூடிய ஊர்.
 

vadalur


வடலூரை சுற்றியுள்ள ராகவேந்திரா சிட்டி,  ஆபத்தானபுரம்,  சேராக்குப்பம்,  கன்னியாகோவில் உள்ளிட்ட  பகுதிகளில் கடந்த ஒரு வருடங்களாக எந்தவிதமான செல்போன் இணைப்புகளும் சரிவர இயங்குவதில்லை. அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல். மற்றும் தனியார் நிறுவனங்களான ஏர்டெல்,  ஜியோ, வோடபோன் ஆகியவற்றிற்கு டவர்கள் இருந்தும் செல்ஃபோன்கள்  பேசிக் கொண்டிருக்கும்போதே அடிக்கடி இணைப்பு துண்டாகிறது.

இதனால்  வடலூர் பகுதிகளில் விபத்து ஏற்பட்டால்கூட  முதலுதவிக்கு 108 ஆம்புலன்ஸ் அழைப்பதற்கு  இயலவில்லை என்றும், திருட்டு சம்பவம் நடைபெற்றால்கூட காவல்துறையை உதவிக்கு அழைக்க முடியவில்லை என்றும் கூறும் அப்பகுதி மக்கள் அதேசமயம் செல்ஃபோன் ரீசார்ஜ் பண்ணுவதற்கு மாதத்திற்கு 100 முதல் 500 வரை பெற்றுக்கொள்ளும் நிறுவனங்கள், செல்ஃபோன் டவர் சரியாக கிடைக்கிறதா என கண்காணிப்பதில்லை என குற்றம் சாட்டுகின்றனர். மக்களிடமிருந்து பணத்தை பெறும் நிறுவனங்கள்  செல்ஃபோன் இணைப்பு சேவையை முழுமையாக வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பப்ஜி கேமில் மூழ்கிய இளைஞர்; தாய் கண்டித்ததால் எடுத்த சோக முடிவு

Published on 04/02/2024 | Edited on 04/02/2024
Youth immersed in pubg game; A sad decision taken because of mother's reprimand

மொபைல் போனில் கேம் விளையாண்டதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மொபைல் செயலிகள் மற்றும் மொபைல் விளையாட்டுகளில் இளைஞர்கள் சிலர் மூழ்கி கிடக்கும் நிலையில் சில அசம்பாவித சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறி வருகிறது. அதுவும் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை வெளிநாட்டு வெர்ஷன்கள் மூலம் பதிவிறக்கி விளையாடும் சூழல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரவீன் செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்தார். ஆனால் தொடர்ந்து முழுநேரமாக கேம் விளையாடுவதிலேயே ஆர்வம் காட்டியதால் அவருடைய தாயார் அவரை கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி மாணவர் பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் மீண்டும் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

வடலூர் தைப்பூச ஜோதி; பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு தரிசனம்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Thaipusam Jyothi Darshan at Vadalur Sathya Gnana Sabha

ஜீவகாருண்யத்தை உலகுக்கு எடுத்துரைத்த வள்ளலார் என்றழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் வடலூரில் சத்திய ஞான சபையை நிறுவினார். இங்கு ஆண்டுதோறும் தைப்பூச பெருவிழா விமரிசையாக நடைபெறும். இதையொட்டி நடைபெறும் ஜோதி தரிசனத்தைக் காண லட்சக்கணக்கானோர் வடலூருக்குத் திரண்டு வருவர். 

இந்த ஆண்டு  153 ஆவது தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா நேற்று (ஜன.24) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருட்பெருஞ்ஜோதி விழாவின் முக்கிய நிகழ்வான ஜோதி தரிசனப் பெருவிழா இன்று (ஜன.25) நடைபெற்றது. இதில் முதல் தரிசனம் காலை 6 மணிக்கு நடைபெற்றது . இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனத்தை கண்டு வழிபட்டனர். தொடர்ந்து காலை 10 மணி, மதியம் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, நாளை(ஜன.26) காலை 5.30 மணிக்கு என 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும்.

விழாவைக் காண வரும் சன்மார்க்க அன்பர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை. மாவட்ட நிர்வாகம் மற்றும் தெய்வ நிலைய நிர்வாகத்தினர் செய்துள்ளனர். சத்திய ஞான சபை வளாகப் பகுதியில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெறுகிறது. மாவட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.