Published on 25/06/2020 | Edited on 25/06/2020
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 67,468 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 45,814 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பாதிக்கப்பட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் சென்னை முழுவதும் நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலமாக கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அடையாற்றில் கரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும், பட்டினப்பாக்கம் சினிவாசபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புப் பகுதியில் 60 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில் அப்பகுதி முழுவதும் முடக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றுவருகிறது.