பெட்ரோல், டீசலின் விலை சில மாதங்களில் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனைக் கண்டித்துப் பல கட்சியினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி மத்திய அரசைக் கண்டித்துவருகின்றனர். அதேபோல் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.