Skip to main content

ரிசார்டிலிருந்து எம்.எல்.ஏக்கள் கிளம்பினார்கள்!!

Published on 25/10/2018 | Edited on 25/10/2018

 

 

தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏக்கள் குற்றாலம் ரிசார்ட்டில் இரண்டு நாட்கள் தங்கியிருந்தார்கள். 18 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரிசார்டிலுள்ள எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு சாதகமாக அமையுமா? அல்லது பாதகமாக அமையுமா? என்கின்ற பரபரப்பு அவர்களுக்குள் நிலவியது. இதனிடையே தீர்ப்பு அவர்களுக்கு எதிராக வந்ததால் அவர்களுக்குள் ஆலோசனை நடைபெற்றது. 

 

டிடிவி தினகரனிடமிருந்து  தகவல்கள் வரும் என்று அவர்கள் காத்திருந்தார்கள். ரிசார்ட்டிற்குள் இவர்களை தவிர மற்றவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் எந்த நேரத்திலும் கிளம்புவதற்கு தயாராக இருந்தனர். இதனிடையே இன்று மதியம் சுமார் 3.15 மணி அளவில் ரிசார்டிலிருந்து எம்.எல்.ஏக்களின் வாகனங்கள் ஒவ்வொன்றாக கிளம்பி சென்றன. இந்நிலையில் கிளம்பிவந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில் பாலாஜி மற்றும் பூந்தமல்லி எம்.எல்.ஏ ஏழுமலை ஆகியோர் பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள்.

 

MLAS LEAVE FROM RESOTR

 

நாங்கள் எங்களது உரிமையை மீட்டெடுப்போமா அல்லது தேர்தலை சந்திப்போமா என்று மதுரையில் கூடி அங்கு வரும் டிடிவி தினகரனோடு ஆலோசனை செய்து முடிவெடுப்போம். சில சமூக வலைத்தளங்களில் நாங்கள் ஐந்து வருடங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற செய்திகள் வருகின்றன. அது தவறானது நாங்கள் தேர்தலை சந்திப்போமா அல்லது மேல்முறையீட்டிற்கு செல்வோமா என்பதை மதுரையில் கூடி ஆலோசனை செய்யவுள்ளோம். நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம் எனவே ஆலோசனைக்காக நாங்கள் மதுரை கிளம்பி செல்கிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பி சென்றார்கள். குற்றால ரிசார்ட் பரபரப்பு இத்துடன் ஓய்ந்தது.

சார்ந்த செய்திகள்

Next Story

மினுமினுக்க மினரல் ஆயில்; பேரீச்சை சர்ச்சையில் மீண்டும் குற்றாலம்

Published on 17/01/2024 | Edited on 17/01/2024

 

mineral oil for shimmer; Again in the date controversy

குற்றாலத்தில் அண்மையில் ஒரே நாளில் கிலோ கணக்கில் கெட்டுப்போன சிப்ஸ், அல்வா, பேரீச்சம்பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மீண்டும் அங்கு பேரீச்சை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த கையோடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளியல் போட்டுவிட்டு திரும்புவதை பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர். அப்படி சபரிமலையில் இருந்து வரும் பக்தர்களை குறி வைத்து குற்றாலத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பல்வேறு கடைகளில் சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை விற்கப்படுகிறது. பல இடங்களில் காலாவதியான சிப்ஸ், அல்வா ஆகியவற்றை விற்பதாக புகார்கள் எழுந்தது. புகாரின் பேரில் கடந்த ஐந்தாம் தேதி குற்றாலம் லட்சுமி நகர் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது காலாவதியான 2,900 கிலோ சிப்ஸ், 4,230 கிலோ மஸ்கோத் அல்வா மற்றும் 1060 கிலோ பேரீச்சம்பழ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றாலம் பேரூராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ரசாயனம் தெளித்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் இதுபோன்ற காலாவதியான பொருட்களை விற்றால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

mineral oil for shimmer; Again in the date controversy

இந்நிலையில், அதே குற்றாலம் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் மீண்டும் ஆய்வு செய்தனர். அப்பொழுது ஒரு கடையில் பேரீச்சை பழத்தின் மீது மினரல் ஆயில் தடவி புதியது போல பளபள என்று விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பேரீச்சை பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 1,100 கிலோ மினரல் ஆயில் பூசப்பட்ட பேரீச்சம் பழம் பறிமுதல் செய்யப்பட்டது. இவ்வாறு ஆயில் பூசி விற்கப்படும் பேரீச்சை உடலுக்கு மிகவும் கெடுதல் என தெரிவித்த அதிகாரிகள் மீண்டும் அந்த பகுதி கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துச் சென்றனர். 

Next Story

சபரிமலை பக்தர்களே குறி; 4,000 கிலோ மஸ்கோத் அல்வா பறிமுதல் 

Published on 04/01/2024 | Edited on 05/01/2024
Sabarimala devotees are the target; 4,000 kg mascot alva seized

குற்றாலத்தில் ஒரே நாளில் கிலோ கணக்கில் கெட்டுப்போன சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சபரிமலை சீசன் என்பதால் சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் சாமி தரிசனம் முடித்த கையோடு தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளியல் போட்டுவிட்டு திரும்புவதை பெரும்பாலானோர் கடைபிடித்து வருகின்றனர். அப்படி சபரிமலையில் இருந்து வரும் பக்தர்களை குறி வைத்து குற்றாலத்தில் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பல்வேறு கடைகளில் சிப்ஸ், அல்வா, பேரிச்சம்பழம் ஆகியவை விற்கப்படுகிறது. பல இடங்களில் காலாவதியான சிப்ஸ், அல்வா ஆகியவற்றை விற்பதாக புகார்கள் எழுந்தது. புகாரின் பேரில் குற்றாலம் லட்சுமி நகர் பகுதியில் உணவு பாதுகாப்புதுறை அதிகாரி நாகசுப்பிரமணியன் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.

அப்பொழுது காலாவதியான 2,900 கிலோ சிப்ஸ், 4,230 கிலோ மஸ்கோத் அல்வா மற்றும் 1060 கிலோ பேரிச்சம்பழ பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு குற்றாலம் பேரூராட்சியில் உள்ள குப்பைக் கிடங்கிற்கு எடுத்துச் செல்லப்பட்டு ரசாயனம் தெளித்து அழிக்கப்பட்டது. தொடர்ந்து அந்த பகுதியில் இதுபோன்ற காலாவதியான பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்பு துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.