Skip to main content

எம்.பி, எம்.எல்.ஏக்கள் போராட்டத்தை தெறிக்கவிட்ட பெண் அதிகாரி!

Published on 20/08/2019 | Edited on 20/08/2019

குமரி மாவட்டத்தின் நீர் ஆதாரமாக இருக்கும் பேச்சிப்பாறை அணையை பலப்படுத்துவதற்காக 30 கோடி ருபாய் உலக வங்கிநிதி உதவியுடன் தமிழக அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அணையின் அருகே சீரோபாயிண்ட் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி வசித்து வரும் 48 குடும்பங்களை சேர்ந்தவர்கள் அப்புறபடுத்த தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து மாவட்ட நிர்வாகம் அந்த 48 குடும்பங்களுக்கும் வேறொரு இடத்தில் நிலம் ஒதுக்கி அங்கு பசுமை வீடு கட்டுவதற்கான உதவிகளையும் செய்வதற்கான உத்தரவையும் வழங்கியது.

 

mla.mp's protest in kaniyakumari

 

 

இதையடுத்து அந்த குடியிருப்புகளை அப்புறபடுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த மக்கள் வசதியில்லாத இடத்தில் நிலம் ஒதுக்கியிருப்பதால் அங்கு குடியேற எதிர்ப்பு தெரிவித்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் எம்.எல்.ஏக்கள் சுரே~;ராஜன், ஆஸ்டின், மனோ தங்கராஜ், பிரின்ஸ், ராஜே~;குமார் ஆகியோரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அந்த பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதோடு போக்குவரத்தும் தடைப்பட்டது. இவர்களுடன் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேசியும் போராட்டத்தை அவர்கள் விடவில்லை. காலையில் இருந்து மதியம் வரை நீடித்த போராட்டத்தை கைவிட பத்மனாபபுரம் சப்-கலெக்டர் சரண்யா அரி சம்பவயிடத்துக்கே வராமல் தனது அலுவலகத்தில் இருந்து கொண்டு தாசில்தார் புரேந்திரதாஸ் ழூலம் தற்போது போராட்டத்தை கைவிட்டுட்டு மாலை தன்னிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சுழூக முடிவு எடுப்பதாக கூறி அதை போராட்டகாரர்களிடம் தெரிவிக்கும் படி கூறினார்.

உடனே தாசில்தார் அதை போராட்டகாரர்களிடம் கூறியதையடுத்து அதை நம்பிய எம்.பி எம்.எல்.ஏக்கள் போராட்டத்தை கைவிட்டு மாலையில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக எம்.பி யும் எம்.எல்.ஏக்களும் தக்கலையில் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு அவர்கள் வந்து இரண்டு மணி நேரமாகியும் சப்-கலெக்டர் வரவில்லை. இதனால் கடுப்பான மக்கள் பிரதிநிதிகள் சாலை மறியலில் ஈடுபடலாம் என்று நினைத்த நிலையில் எங்கோ உள்ள பிரச்சினைக்கு இங்கு சாலை மறியல் செய்தால் இந்த பகுதி மக்கள் தங்கள் மீது கோபத்தை காட்டுவார்கள் அதுவும் மாலை நேரம் என்பதால் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்திலே உட்கார்ந்தனர்.

 

mla.mp's protest in kaniyakumari

 

இதனையடுத்து திட்டமிட்டபடி இருட்டும் நேரத்தில் அலுவலகம் வந்த சப்-கலெக்டரிடம் பேச்சு வார்த்தை நடத்திய மக்கள் பிரதிநிதிகளிடம் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தை இன்னொரு நாள் நடத்தி அதில் கலெக்டரிடம் ஆலோசித்து விட்டு நல்ல முடிவு எடுக்கலாம் என மக்கள் பிரதிநிதிகளிடம் சொல்லி அவர்களை திருப்பி அனுப்பினார் சப்-கலெக்டர். இதனால் முடிவு இல்லாமல் முகத்தை தொங்க போட்டு கொண்டு வெளியேறினார்கள் அந்த 5 மக்கள் பிரதிநிதிகளும். இது சீரோபயிண்ட் மக்களுக்கு மக்கள் பிரதிநிதிகள் மீது ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.