இன்று (27.12.2021) காலை 11.15 மணியளவில் திருவல்லிக்கேணி முத்தையா தோட்டம் பகுதியில் நகர்ப்புற சுகாதார மையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. 3.04கோடியில் கட்டப்படும் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கும் பணி திட்டப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் கட்டடப் பணியினை துவக்கி வைத்தார். அதன்பின்னர் தொகுதி மக்களைச் சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.