சென்னை எழும்பூர் தொகுதி எம்.எல்.ஏ. இ.பரந்தாமன் தொகுதியின் தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்து கொடுத்து வருகிறார். அந்த வகையில் இன்று (24.12.2021) 78-ஆவது வட்டம், சூளை, பெரியதம்பி தெருவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நவீன தொழில்நுட்ப ஆர்.எம்.யு. மின்மாற்றியை இயக்கி வைத்தர்.
அதன் பின்னர் மின்மாற்றிக்காக பணியில் ஈடுபட்ட மின் ஊழியர்கள், மாநகராட்சி ஊழியர்களுக்கு பேன்ட், சர்ட், பெண்களுக்கு புடவைகளையும் வழங்கினார். அதே போல் எழும்பூர் தொகுதி, 104-ஆவது வட்டம், ஓட்டேரி, பிரிக்ளின் சாலையில், மேகலா தியேட்டர் அருகே புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகரப் பேருந்து நிழற்குடையை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.