Skip to main content

"ஜெ" பாணியில் முதல்வர் எடப்பாடிக்கு நன்றி மழை பொழிந்த கொங்கு மண்டல எம்.எல்.ஏ

Published on 20/03/2020 | Edited on 20/03/2020

நேற்று நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பேசிய ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தென்னரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா முதல்வராக சட்டமன்றத்தில் இருந்தால் அவர் கட்சியின் எம்.எல்.ஏ.ஒருவர் எப்படி பவ்வியமாகவும் அதே சமயத்தில் வார்த்தைக்கு வார்த்தை அம்மா என்றும், நன்றி என்றும் பேசுவாரோ அதேபோல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கை கூப்பி வணங்கி விட்டு இப்படி பேசினார்.

 

MLA Thanks to Chief Minister Edappadi in  "J" style


"ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவித்தல்,  ஈரோடு பஸ் நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நவீனமயமாக்க அனுமதி வழங்கியது. ஈரோடு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கனி மார்க்கெட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம் அமைக்க அனுமதி கொடுத்தால், பெரும்பள்ளம் ஓடையை அழகுபடுத்தி மேம்படுத்த 24 தடுப்பணைகள் அமைத்து மழை நீர் சேகரிப்பு செய்து இருபுறமும் நடை பாதைகள் அமைக்க ரூ 200 கோடி ஒதுக்கியது, இது போன்ற பல்வேறு பணிகளுக்கு அனுமதி கொடுத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும்  உறுதுணையாக இருக்கும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

பெரியார் பிறந்த ஈரோடு மண்ணில் மகளிருக்கு என்று அரசு கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அதைப்போல் ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியை அரசு கல்லூரியாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்கள் ஈமச் சடங்கிற்காக முதலில் ரூ 250 வழங்கப்பட்டது. பின்னர் அதை அம்மா முதல்வராக இருந்தபோது ரூ.2,500 ஆக  உயர்த்தி அறிவித்தார். இன்றைய விலைவாசி சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்தத் தொகையை உயர்த்தி ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

சென்ற ஆண்டு வரை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து வகுப்பறை கட்டி கொடுப்பதற்கு அரசாணை வழங்கப்பட்டது. தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வகுப்பறை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். ஈரோடு மாநகராட்சி மூலம் தினசரி 220 டன் மக்கும் குப்பை, மக்காத குப்பை சேர்கிறது. காவிரி ஆற்றை மாசுபடுத்திய குப்பைகள் எல்லாம் ஆர்கானிக் மூலம் உரமாக்கி விவசாயிகளுக்கு நாளொன்றுக்கு 15 டன்  விலை இல்லாமல் உரமாக வழங்கப்படுகிறது. எனவே காவிரி ஆற்றை மாசுபாடு இருந்து காப்பாற்றிய முதல்வர் எடப்பாடியாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

 

MLA Thanks to Chief Minister Edappadi in  "J" style

 

அதேபோல் ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள சட்டமன்ற குடியிருப்பு வளாகத்தில் 20 ஆண்டு காலமாக பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தற்போது நான் அவை குழு தலைவராக பொறுப்பேற்ற பிறகு எங்கள் குழு சார்பில் பலகோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சித் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு நிலுவை தொகை மற்றும்  ஓய்வூதிய பணப்பலன்கள் சுமார் 276 கோடி மதிப்பில் சுமார் ஆயிரம் ஓய்வூதியர்களுக்கு 16 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது.  அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரோடு மக்களின் நீண்ட நாள்  கோரிக்கையை ஏற்று ரூ. 485 கோடி செலவில்  நடைபெற்றுவந்த ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்தை முதல்வர் விரைவில் திறந்து வைக்கிறார். அதேபோல் பெருந்துறை ரோடு காளிங்கராயன் இல்லத்திலிருந்து திண்டல் வரை ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம் பாலம் அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க பணியும் முதல்வர் தொடங்கி வைக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். என தென்னரசு எம்.எல்.ஏ. பேசினார்.

இதில் வார்த்தைக்கு வார்த்தை முதல்வரை வணங்குகிறேன், நன்றி, நன்றி என்றும் பேசினார். அதேபோல் கொங்கு மண்டல அமைச்சர்களான செங்கோட்டையன், கருப்பணன், தங்கமணி, வேலுமணிக்கும் தவறாமல் நன்றி சொல்லி விசுவாசத்தை காட்டினாராம் தென்னரசு.

சபையிலிருந்து வெளியே வந்த எம்.எல்.ஏ. தென்னரசுவிடம் "எம்.எல்.ஏ. சார் உங்க பேச்சு ஐஸ் மழை சார்... கூடிய சீக்கிரம் அடுத்த கோட்டா உண்டு'' என கூறினாராம் கொங்கு மண்டல சீனியர் அமைச்சர் ஒருவர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.