Advertisment
உள்ளாட்சி நகர்ப்புற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெயரில் போலியாக சமூக ஊடக கணக்குகளை தொடங்கி பல அவதூறுகளை பரப்பி வருகின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பாலாஜி தலைமையில் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.